கவர்னர் மாளிகை டூ RSS மாளிகை…. “விடமாட்டோம்.. CM விஜய்யிடம் பேசப்போகிறேன்”…. ஆளுநருக்கு எதிராக வன்னி அரசு எடுத்த அதிரடி முடிவு…!

By Nanthini on ஆனி 1, 2026

Spread the love

தமிழக ஆளுநர் மாளிகை சனாதனத்தின் அடையாளமாகவும், ஆர்.எஸ்.எஸ். மாளிகையாகவும் மாற்றப்பட்டு வருவதாகத் தமிழக அமைச்சர் வன்னி அரசு கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். சமீபத்தில் ஆளுநர் மாளிகையில் வைக்கப்பட்ட திருவள்ளுவரின் படம் காவி நிறத்தில் சித்தரிக்கப்பட்டிருந்ததற்குத் தனது தார்மீகக் கண்டனத்தைப் பதிவு செய்த அவர், முந்தைய ஆளுநர் ஆர்.என். ரவியும் இதே போன்ற சர்ச்சைக்குரிய செயல்களில் தான் ஈடுபட்டார் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

தமிழர்களின் அடையாளத்தை சிதைக்கும் வகையிலான இத்தகைய நடவடிக்கைகள் ஆளுநர் மாளிகையில் தொடர்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று வலியுறுத்திய வன்னி அரசு, இந்த விவகாரம் குறித்து மாண்புமிகு முதலமைச்சர் விஜய்யிடம் நேரில் பேசி ஆலோசித்து, உரிய நடவடிக்கைகள் மூலம் இதனைத் தடுத்து நிறுத்துவோம் என்றும் உறுதியளித்துள்ளார்.