இபிஎஸ்-க்கு அடுத்த ஷாக்…. விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய அதிமுக EX அமைச்சர்…. புதிய பரபரப்பு…!

By Nanthini on தை 8, 2026

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக விஜய் களத்தில் இறங்கிய பிறகு தமிழக தேர்தல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாகவே உள்ளது. அதிலும் விஜயின் தமிழக வெற்றிக்கழக கட்சியில் அதிமுகவின் மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் இணைந்த பிறகு மாற்று கட்சியினர் பலரும் கட்சி தாவி வருகிறார்கள்.

குறிப்பாக அதிமுகவில் இபிஎஸ் மீது அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளை டார்கெட் செய்து செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தி கட்சியில் இணைத்து வருகின்றார். அதே சமயம்  செங்கோட்டையன் வரவுக்கு பிறகு தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு புது பலம் கூடியுள்ளது. அவர் நகர்த்தும் காய்களால் தான் திமுக, அதிமுக மற்றும் பாஜகவில் இருந்து பல முக்கிய தலைவர்கள் தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கு வருகின்றனர்.

   
இந்நிலையில் கரூர் சம்பவத்திற்கு விஜய் பொறுப்பேற்க முடியாது, அங்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய கடமை திமுக அரசுக்கே உள்ளது என KT ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விஜய்க்கு சம்மன் அனுப்பி தவறான முன்னுதாரணத்தை உருவாக்கி விடக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். கூட்டணியில் மேலும் கட்சிகளை சேர்க்கும் பொருட்டு டெல்லியில் EPS முகாமிட்டுள்ள நிலையில் KTR-ன் விஜய்க்கு ஆதரவான பேச்சு அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.