தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் கமல்ஹாசன். வயதானாலும் இன்னும் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார். உலக நாயகன் என்று அனைவராலும் கொண்டாடப்படும் கமல்ஹாசன் பாலிவுட்டில் அமிதாபச்சனால் ஓரம் கட்டப்பட்டார். ஹிந்தியில் கமல்ஹாசனை ஓரம் கட்டினார்கள். அமிதாபச்சன் கமலை வரவிடாமல் செய்ய என்ன முடியுமோ அதெல்லாம் செய்துள்ளார். சென்னையில் ஒரு இந்தி படத்தின் தயாரிப்பு வேலைகள் நடந்து கொண்டிருந்த போது அந்த படத்தில் அமிதாப்பச்சன் ஹீரோ, கமல் செகண்ட் ஹீரோ மற்றும் ஸ்ரீதேவி ஹீரோயின்.

அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயத்தில் பாதி படம் எடுத்து முடித்த போது படத்தை ட்ராப் பண்ணிட்டாங்க. கமலை வைத்து படம் எடுத்தால் அந்த படம் டிராப் ஆகும். கமல் ஒரு துரதிஷ்டம் பிடித்தவர் என்ற நெகட்டிவ் இமேஜை அவர் மீது உருவாக்கியுள்ளனர். அன்றைய காலத்தில் அமிதாப்பச்சனுக்கு சினிமா பின்னணி மற்றும் அரசியல் பின்னணி இருந்துள்ளது. கமல் அவரை எதுவும் பண்ண முடியாது.

பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே மற்றும் கிழக்கே போகும் ரயில் ஆகிய இரண்டு படங்களை வெளியிட விடாமல் செய்தார்கள். கிராமிய படங்கள் வந்தால் அமிதாப்பச்சன் படங்களுக்கு வரவேற்பு கிடைக்காது என்று அப்படி செய்துள்ளனர். ஏக்துஜே கேலியே என்ற படம் எதிர்பாராத விதமாக ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் அடிக்க அமிதாப்பச்சன் பல ரசிகர் மன்றங்களை காலி பண்ணிடுச்சு. அதுல வந்த ரகளை தான் கமல் மற்றும் பாரதிராஜாவை ஓரம் கட்டிட்டாங்க. இந்த தகவலை பிரபல டாக்டர் காந்தராஜ் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
