இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள நேபாள எல்லைக்கு அருகே, முறையான ஆவணங்கள் ஏதுமின்றி சுற்றித்திரிந்த 36 வயது அமெரிக்க குடிமகனான ஜோர்டன் பிரவுன் என்பவரை “சஷாஸ்த்ர சீமா பல்” படையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த இவர், சோனெளலி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நேபாள் எல்லையின் 516-வது தூண் அருகே SSB-யின் 22-வது படைப் பிரிவினரால் ஞாயிற்றுக்கிழமை பிடிபட்டார். பாஸ்போர்ட், விசா போன்ற எந்தவொரு சட்டப்பூர்வ ஆவணங்களும் அவரிடம் இல்லாத நிலையில், பிடிபடும் போது தப்பிக்க முயன்ற அவரைப் படையினர் மடக்கிப் பிடித்து உத்தரப் பிரதேச போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஜோர்டன் பிரவுன் சுற்றுலா விசா மூலம் முதலில் தாய்லாந்திற்குச் சென்றுள்ளதும், அங்கு அவர் தனது பாஸ்போர்ட்டைத் தவறவிட்டதும் தெரியவந்துள்ளது. அதன்பின்னர், அவர் கடல் வழியாக இலங்கைக்குள் சட்டவிரோதமாக நுழைந்து, அங்கிருந்து 2025-ம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதி கடல் மார்க்கமாகவே இந்தியாவிற்குள் ஊடுருவியுள்ளார். கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக எந்தவித முறையான ஆவணங்களும் இன்றி இந்தியாவில் தங்கியிருந்த அவர், கோவாவிலிருந்து பெங்களூருக்குப் பயணித்து, பின்னர் சோனெளலி எல்லை வழியாக நேபாளத்திற்குள் நுழைய முயன்றபோது அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார்.
கைது செய்யப்பட்ட ஜோர்டன் பிரவுனிடமிருந்து இந்திய மதிப்புப்படி 31,460 ரூபாய் பணமும், இரண்டு மொபைல் போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தற்போது அவர் மீது குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் சட்டம் 21/23-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்ததன் பின்னணியில் உள்ள நோக்கம் குறித்தும், அவருக்கு உதவியவர்கள் யார் என்பது குறித்தும் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் டீக் மாவட்டத்தில் உள்ள மாவாய் கிராமத்தைச் சேர்ந்த 55 வயதான கீதா தேவி என்ற பெண், ஞாயிற்றுக்கிழமை…
முதல் சந்திப்பிலேயே ரூ 20,500 கட்டணம் என்பது மிகவும் அதிகம், மேலும் இது சமீபத்தில் டேட்டிங் செயலிகளில் பலருக்கும் நடக்கும்…
2026-ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி ஆடி அமாவாசை அன்று நிகழவுள்ளது. இந்த முழு சூரிய…
தஞ்சாவூர் போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசாத விஷயங்களைத் திரித்து, வீடியோவை எடிட் செய்து பரப்புகிறார்கள் என்று திமுக…
தமிழகத்தில் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டிருப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என திமுக…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, தனது பாட்டி வீட்டில் தங்கி 10-ஆம்…