சினிமா நடிகைகள் தங்களது விடுமுறை நாட்களை கொண்டாடுவதற்காக தற்போது அதிகம் தேர்வு செய்யும் இடமாக மாறி உள்ளது மாலத்தீவு. அந்த வகையில் நடிகை அமலாபால் மாலத்தீவு கடற்கரையில் நின்று எடுத்த புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை அமலாபால் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி டாப் டென் நடிகர்களுடன் சேர்ந்து ஜோடி போட்டு பல படங்களில் நடித்துள்ளார். ‘வீரசேகரன்’ என்ற படத்தின் மூலம் தமிழில் இவர் அறிமுகமாக இருந்தாலும், இவருக்கு ‘மைனா’ என்ற படம் தான் திருப்பு முனையாக அமைந்தது.
இதைத் தொடர்ந்து இப்பொழுது பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் அமலா பால் தனது விடுமுறை நாட்களை கொண்டாட மாலத்தீவிற்கு சென்றுள்ளார். மாலத்தீவு முழுக்க முழுக்க சுற்றுலா துறையை நம்பி உள்ள ஒரு தீவாகும். எனவே இந்நாட்டின் அரசு சினிமா பிரபலங்களை தங்களது சொந்த செலவில் கூட்டிச் சென்று புகைப்படங்களை எடுத்து அதை இணையங்களில் வெளியிட்டு சாதாரண மக்களின் ஆசையை தூண்டுகிறார்கள்.
அவர்களும் அப்படி இப்படி போஸ் கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் தனது விடுமுறையை கொண்டாட மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை அமலா பால் சற்று வித்தியாசமான பிகினி உடை அணிந்து கடற்கரை மணலில் பிட்டு பட ரேஞ்சுக்கு கவர்ச்சியான புகைப்படங்களை அள்ளி விலாசி உள்ளார். தற்பொழுது இந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியாகி காட்டுத் தீயாய் பரவி வருகிறது.