Categories: சினிமா

இயக்குனராக உருவெடுத்த அல்வா வாசு காமெடியனாக நடித்தது ஏன்..? இவர் வாழ்க்கையில் இப்படியொரு சோக கதையா..?

Spread the love

பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் அல்வாவாசு. ரஜினிகாந்த் உடன் ஒரு படத்தில் நடித்திருக்கிறார். சத்யராஜ் உடன் அமைதிப்படை படத்திலும் நடித்த காட்சிகள் பெருமளவில் பேசப்பட்டது. 900 க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். இயக்குனர் மணி வண்ணனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். அல்வா வாசு குடும்பத்தோடு மதுரையில் வசித்து வந்தார். அவருக்கு ஆறு மாதங்களுக்கு முன்பாக திடீரென்று உடலில் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சில வருடங்களுக்கு முன் உயிரிழந்தார்.

இவருக்கு அமுதா என்ற மனைவியும் கிருஷ்ண ஜெயந்திக்கா என்ற மகளும் உள்ளனர். எப்போதுமே வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடியன்ளுக்கு பின்னால் ஒரு சோகம் ஒளிந்து இருக்கும். காமெடி நடிகர் அல்வா வாசுவின் வாழ்க்கையில் அப்படி ஒரு சோகம் இருக்கிறது. இவருடைய சொந்த ஊர் மதுரை. ஏழ்மையான குடும்பம் உணவுக்கு திண்டாட்டமான நிலைமைதான். இருப்பினும் இந்த அன்றாட சோக மேகங்கள் வாசுவின் இளமை காலத்தை பாதிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

வாசு தன்னுடைய நண்பர்களோடு சுற்றித்திரிந்தாலும் படிப்பில் கெட்டிக்காரர். இசையில் ஆர்வம் அவருக்கு அதிகம். கிடார் மீது ஆசை கொண்டு கிடார் வாசிக்க பயின்றார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எம் காம் படிக்கும்போது மியூசிக் என்றால் வாசு தான் என்று கல்லூரியில் அவர் புகழ் பாடுவார்கள். அந்த அளவிற்கு மியூசிக் மீது காதல் கொண்டுள்ளார். இதனை அடுத்து சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு சென்று இருக்கிறார்.  அங்கு பலரும் இவரை ஏளனம் செய்துள்ளார்கள். ஆனாலும் தான் வாழ்ந்தாலும், வீழ்ந்தாலும் இந்த சினிமாவில் தான் இருப்பேன் என்பதில் உறுதியாக இருந்துள்ளார் வாசு. அதன் பிறகு தான் இயக்குனர் மணிவண்ணனிடம் உதவியாளராக சேர்ந்துள்ளார்.

இசையமைக்க வேண்டும் என்ற கனவு படிப்படியாக இயக்குனராக வேண்டும் என்ற கனவையும் சேர்த்து விதைத்துள்ளது. அதனை அடுத்து பல ஒன்லைன்களை எழுதினார். பல சீன்களை பிடித்தார். அன்று இருந்த பல ஆயிரம் உதவி இயக்குனர்கள் பட்டியலில் கவனிக்கப்படும் மனிதராகவும் வாசு வலம் வந்தார்.அவருடைய சினிமா பயணம் இலக்கை நோக்கி தொடர்ந்தாலும் சாப்பாட்டிற்கு கொஞ்சமாவது பொருளாதாரம் வேண்டும் என்பதால் காமெடியனாக துணை நடிகனாக தன்னுடைய திரை பயணத்தை தொடர்ந்தார். அப்படித்தான் வடிவேலுவுடன் நட்பு கிடைத்தது. பல படங்களிலும் அவரோடு நடித்தார். கருப்புசாமி குத்தகைதாரர், எல்லாம் அவன் செயல் போன்ற பல படங்களில் வடிவேலு சேர்ந்து பட்டையை கிளப்பினார்.

Soundarya

Recent Posts

“உங்க அப்பா அங்கேயே சுத்திட்டு இருக்காரு!”… இறந்த தந்தையின் ஆவியை ‘பார்சல்’ செய்ய வந்த குடும்பம்…கோட்டா மருத்துவமனையில் நடந்த அதிர வைக்கும் தாந்திரீக சடங்கு…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…

7 மணத்தியாலங்கள் ago

“மனுஷன் பேசுறது நாய்க்கே புரியுதா?”… நாயுடன் அமர்ந்து ராஜு குமார் செய்த அலப்பறை… வயிறு குலுங்கச் சிரிக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…

7 மணத்தியாலங்கள் ago

“ஒரே ஒரு சின்ன தவறு.. அழகான புன்னகைக்கு ஆசைப்பட்டுமொத்த பற்களும் அவுட்!… துருக்கி பல் மருத்துவர் செய்த விபரீத… ஜாக்கியின் கண்ணீர் கதை”…!!!

அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…

8 மணத்தியாலங்கள் ago

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

8 மணத்தியாலங்கள் ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

9 மணத்தியாலங்கள் ago

“எங்களுக்கும் இப்படி ஒரு சார் கிடைச்சிருக்கலாம்!”… மாணவர்களுடன் சேர்ந்து பாடி அசத்திய கிதார் ஆசிரியர்… நெட்டிசன்களின் மனதை நெகிழ வைத்த ஆசிரியர்…. இணையத்தை நனைக்கும் வைரல் வீடியோ…!!!

இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…

9 மணத்தியாலங்கள் ago