தஞ்சையில் அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, 2026 சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் 4 முனை போட்டி ஏற்படும். எங்கள் தலைமையில் கூட்டணி கிடையாது. ஆனால் வெற்றி கூட்டணியில்தான் இடம்பெறுவோம். டிசம்பர் 31ஆம் தேதிக்குள் கூட்டணி முடிவாகிவிடும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அது தள்ளிப் போகிறது. கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க அமமுகவிற்கு பிப்ரவரி மாதம் வரை அவகாசம் உள்ளது. 2026 தேர்தலில் நாங்கள் இடம்பெறும் கூட்டணி தான் கட்டாயம் வெற்றி பெறும். எங்களை தவிர்த்து விட்டு எந்த கூட்டணியும் ஆட்சி அமைக்க முடியாது.
யார் துரோகி யார் அப்பாவி என தமிழக மக்களுக்கும் தொண்டர்களுக்கும் நன்றாகவே தெரியும். செங்கோட்டையன் ஒரு மூத்த நிர்வாகி. அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதை தொடர்ந்து அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதற்கு அவர் மனம் வருந்தியதாகவும் நான் பலமுறை கூறியுள்ளேன். பிறகு அவரே ஒரு முடிவெடுத்து விஜயின் தமிழக வெற்றிக்கலகம் கட்சியில் இணைந்து இருக்கிறார். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று தினகரன் தெரிவித்துள்ளார். தினகரன் யாருடன் கூட்டணி அமைக்க போகிறார் என்பது தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…