உலகின் மிகச்சிறிய நாடு பற்றி தெரியுமா..? பலரும் அறிந்திராத ஆச்சரிய தகவல்கள்..

By Deepika on பங்குனி 31, 2024

Spread the love

உங்களால் ஒரு தனி நாட்டை உருவாக்க முடியும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா ? நம்மில் பலருக்கு தனி நாட்டில் வாழ வேண்டும் என்ற ஆசை எப்போதாவது வந்திருக்கும். அங்கு நாம் மட்டுமே வசிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும் அது முடியும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா ? அப்படி ஒரு இடம் உள்ளது, அந்த இடத்தின் பெயர்

Major Roy bates

லண்டனில் இருந்து வெறும் ஆறு மெயில் தூரத்தில் உள்ள சுபோல்க் கடலின் நடுவில் அமைந்துள்ளது. இது 1942 ஆம் ஆண்டு இரண்டாம் உலக போரின் போரின் ஜெர்மனி படையின் குண்டுகளிடம் இருந்து பாதுகாக்க கட்டப்பட்டது. 1967 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் படையில் இருந்த மேஜர் ராய் பேட்ஸ் இந்த டை வாங்கி அதை தனி நாடாக அறிவித்தார்.

   
   

அதுமட்டுமல்ல டின் பிரின்ஸ் ராய் பேட்ஸ் என அவருக்கு அவரே பெயர் சூட்டினார். இந்த டிற்கு பாஸ்போர்ட், ஸ்டாம்ப் முதலியவற்றையும் அறிவித்தார். லண்டன் இதை தனி நாடாக அங்கீரகரிக்கவில்லை, இருப்பினும் இந்த நாட்டிற்கென தனி கரன்சியும், கொடியும் உள்ளது.

 

sealand

1978 ஆம் ஆண்டு டச் படையினர் இதை தாக்க முற்பட்டனர், 1990 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் போலீஸ் ரெயிட் நடத்தில் ராய்யின் மகன் மைக்கேலை கைது செய்தனர். 2000 ஆம் ஆண்டில் டில் இருந்து கொண்டு இவர்கள் அரசாங்க இணையதளத்தை ஹேக்கிங் செய்வதாக குற்றசாட்டு எழுந்து கைது செய்யப்பட்டனர். இவ்வளவு சர்சைகள் டை சுற்றி இருந்தாலும் இது ஒரு பாப்புலரான டூரிஸ்ட் இடமாக உள்ளது தான் ஆச்சர்யமே.

இங்கு செல்ல வேண்டும் என்றால் லண்டனில் இருந்து கார் வழியாக சுபோல்க் செல்ல வேண்டும், அங்கு உனகளுக்கு விசா கிடைத்த பின்னர், படகு வழியாக நம்மை அழைத்து செல்வார்கள். ஆனால் இது தொடர்வது கடினம் தான். ஆம், நாட்டை அழிக்கும் எண்ணம் இங்கிலாந்துக்கு உண்டு. இதை மொத்தமாக தகர்த்து எரிவதற்கு வாய்ப்புகள் உண்டு.