தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் அரசு சார்பில் ரேஷன் கடைகள் மூலமாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் பொங்கல் பரிசு தொகுப்புடன் சேர்த்து ரொக்க பணமும் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 20 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு, ஏலக்காய், முந்திரி, உலர் திராட்சை அடங்கிய பரிசுத்தொகுப்பு ஜனவரி இரண்டாவது வாரத்திற்குள் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 3000 ரூபாய் பரிசு தொகை வழங்குவதற்கான அறிவிப்பையும் ஓரிரு நாட்களில் அரசு அறிவிக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
