CINEMA
என்னப்பா சொல்றீங்க…! விஜயின் மகன் படம் எடுப்பதற்கு அஜித்தின் மனைவி ஷாலினி தான் காரணமா.?
கடந்த சில நாட்களுக்கு முன்னால் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் படம் இயக்கப் போவதாக தகவல் வெளியாகி இருந்தது, ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தை லைக்கா நிறுவனம்தான் தயாரிக்க போகிறோம் என்று அஃபீசியலாக இருவரும் கைகோர்த்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வந்தது, ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் முதலில் விஜய் சேதுபதி தான் நடிக்க உள்ளார் என்று பல தகவல்கள் பலவிதமாக வெளியாகி கொண்டிருந்தது.
ஆனால் விக்ரமின் மகனான துருவ் விக்ரம் தான் விஜயின் மகன் சஞ்சய் படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்கள். விக்ரமின் மகன் திருவ் விக்ரம் நேஷனல் கபடி விளையாட்டு வீரர் பாண்டியன் அவரின் வாழ்க்கை சரிதத்தை மையமாக மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படம் முடிவடைந்த பின் ஜெய்சன் சஞ்சய் உடன் இணைந்து படம் நடிக்க உள்ளதாக தெரியவந்த நிலையில், தற்போது சஞ்சயின் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தான் துருவ் விக்ரம் நடிக்க உள்ளாராம், இப்படத்தில் இவர் கதாநாயகன் இல்லையாம்.
விஜயின் மகன் படம் எடுக்க போகிறேன் என்று அறிவித்ததில் இருந்து பல சர்ச்சைகள் கிளம்பி வந்தது, தன் அப்பாவின் அனுமதியின்றி படம் இயக்குகிறான் என்று பலரும் பேசி வந்தார்கள். தற்போது ஜேசன் சஞ்சய் எப்படி லைக்கா நிறுவனத்துடன் கை கோர்த்தார் என்று தகவல் கசிந்துள்ளது. ஜேசன் சஞ்சய் தன் அப்பாவான விஜய் அவர்களுக்கு தெரியாமல் தான் லைக்கா நிறுவனத்துடன் கைகோர்த்து படம் இயக்க முன்வந்தாராம், இதில் முக்கியமாக லைக்கா நிறுவனத்துடன் இவர் இணைவதற்கு காரணம் அஜித்தின் மனைவி ஷாலினி தான் உதவிகரமாக இருந்தாராம்.