Connect with us

“உன்மேல செம்ம பொறாமைல இருக்கேன்…” சுசித்ராவிடம் நேரடியாக சொன்ன அஜித்… காரணம் இதுதான்!

CINEMA

“உன்மேல செம்ம பொறாமைல இருக்கேன்…” சுசித்ராவிடம் நேரடியாக சொன்ன அஜித்… காரணம் இதுதான்!

 

தமிழ் திரையுலகில் முன்னணி பாடகியாக  வலம் வந்தவர் தான் பாடகி சுசித்ரா. இவர் ரேடியோ மிர்ச்சியில் தொகுப்பாளராக பயணத்தை தொடங்கினார். இவரும் நடிகர் கார்த்திக் குமாரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். பாடகியாக நல்லபடியாக சென்று கொண்டிருண்ட சுசித்ராவின் வாழ்க்கையில் அடுத்தடுத்து பல சர்ச்சைகள் எழுந்தன.

2017 ஆம் ஆண்டு சுசித்ரா சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் பல முன்னணி நடிகர், நடிகைகளின் அந்தரங்க வீடியோக்கள் வெளியாகின. இதையெல்லாம் சுசித்ராதான் வெளியிட்டார் என்று சொல்லப்பட்டது. ஆனால் சுசித்ராவோ அந்த வீடியோக்களை நான் வெளியிடவில்லை. இன்னும் சொல்லப் போனால் அதில் இருக்கும் ஒரு வீடியோவைக் கூட நான் பார்த்தது இல்லை எனக் கூறி அதிர்ச்சியை கிளப்பினார்.

   

இப்போது அந்த புகைப்படங்கள தன்னுடைய பாஸ்வேர்ட்களை திருடி முன்னாள் கணவர் கார்த்திக் குமார்தான் வெளியிட்டார் எனக் கூறிவருகிறார். இந்நிலையில் இப்போது அவர் அடுத்தடுத்து பல யுடியூப் சேனல்களில் பேட்டிகொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களைப் பற்றி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். அதில் தற்போது அவர் அளித்துள்ள நேர்காணலில் போதை கலாச்சாரம் தமிழ் சினிமாவில் வெகு சாதாரணமாகிவிட்டது எனக் கூறியுள்ளார்.

அதில் அவர் அஜித் பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார். அதில் “நாங்கள் தயாநிதி அழகிரியின் கல்யாண ரிசப்ஷன் பார்ட்டிக்கு  பாட்டு பாட சென்றிருந்தோம். அந்த பார்ட்டிக்கு அஜித்தும் வந்திருந்தார். விடிய விடியா நாங்கள் அந்தாக்‌ஷரி பாட அவர் ரசித்துக் கேட்டார். சில பாடல்களைக் கேட்டு அவர் அழுதே விட்டார்.

அவர் என்னிடம் நீ விஜய்க்காக பாடிய “ஒரு சின்னத்தாமரை” பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். அதுக்காக உன் மேல நான் செம்ம பொறாமைல இருக்கேன்.” என பாராட்டினார். அன்று விடிய விடிய அவர் எங்களோடு இருந்து விட்டு சென்றார்” எனக் கூறியுள்ளார்.

Continue Reading
To Top