பிரபல நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித் குமார் (AK) அவர்களுக்கு, மகிந்திரா நிறுவனம் தனது பிரத்யேக ‘BE FORMULA E EDITION’ காரைப் பரிசாக வழங்கியுள்ளது. அஜித் குமார் திரையுலகைத் தாண்டி கார் பந்தயங்களில் (Racing) கொண்டுள்ள அலாதி ஆர்வத்தையும், அவரது அர்ப்பணிப்பையும் பாராட்டும் விதமாக இந்த கார் வழங்கப்பட்டுள்ளது.
மகிந்திரா நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் பிரிவு தலைவர் ஆர். வேலுசாமி அவர்கள், அஜித்தின் ரேசிங் ஆர்வத்தை கௌரவிக்கும் வகையில் இந்தச் சிறப்பு பதிப்பு காரை வழங்கினார். ‘Formula E’ தொழில்நுட்பத்தில் உருவான இந்த அதிநவீன மின்சார கார் (EV), பந்தயக் களத்திற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபகாலமாக அஜித் குமார் தனது சொந்த ரேசிங் அணியைத் தொடங்கி, சர்வதேச அளவில் கார் பந்தயங்களில் பங்கேற்கத் திட்டமிட்டு வருகிறார். இந்தச் சூழலில் மகிந்திரா நிறுவனம் அவருக்கு வழங்கியுள்ள இந்தப் பரிசு, அவரது ரேசிங் பயணத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
ஆளுநரின் வாகனக் கடந்து செல்லும் நிகழ்விற்காகப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், பிரசவ வலியால் அவதிப்பட்ட தன் கர்ப்பிணி மனைவியுடன் கணவர் ஒருவர்…
பாஜக தலைவர்களில் ஒருவரான அண்ணாமலை, கட்சியில் இருந்து தனக்கு ஏற்பட்டுள்ள சில அரசியல் அதிருப்திகள் காரணமாக, பாஜகவிலிருந்து விலகி புதிய…
ஒடிசா மாநிலம் ஜெகத்சிங்பூரில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (DRDA) அலுவலகத்தில் பணியாற்றிய சஞ்சய் அடேகா என்ற இளநிலை…
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஓல்ட் ஏர்போர்ட் சாலையில், அம்மாநில ஆளுநரின் பாதுகாப்பு வாகனங்கள் கடந்து செல்வதற்காக சுமார் 30…
கடலூர் மாவட்டம் சிதம்பரம் வடக்கு வீதியில் 'குமர விலாஸ்' என்ற ஹோட்டலை நடத்தி வரும் ராஜசுந்தரம் - ஜெயந்தி தம்பதியினரிடம்,…
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பா.ஜ.க கட்சியிலிருந்து விலகப்போவதாகத் தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்…