Categories: CINEMA

அஜீத்துக்கு நேர்லே பத்திரக்கை கொடுத்தோம்.. அவர் பேசுனது ரொம்ப அநாகரிகம்.. கலைஞர் 100-க்கு அஜித் வராதது குறித்து பிரபல தயாரிப்பாளர் ஆவேசம்..

சமீபத்தில் கலைஞர் 100 விழா சென்னை, கிண்டி ரேஸ்கோர்ஸில் நடந்தது. இந்த விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் பங்கேற்றனர். விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். ஆனால் விழாவுக்கு எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த விழாவுக்கு அஜீத்குமார், விஜய் வராதது மிகப்பெரிய பிரச்னையாக பார்க்கப்பட்டது. இதுகுறித்து பலரும் விமர்சித்தனர். ஆனால் விஜயகாந்த் மறைவுக்கே அஜீத்குமார் நேரில் வராதவர் என்பதால் இந்த விழாவுக்கு அவர் வருவதற்கான சாத்தியமே இல்லை என்றும் பேசப்பட்டது. அதேபோல், சென்னையில் இருந்தும் இந்த விழாவுக்கு அஜீத்குமார் வரவில்லை.

இதுகுறித்து திரைப்படத் தயாரிப்பாளர் கே ராஜன் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியதாவது, இந்த விழாவில் அஜீத்குமார் கலந்துக்க மாட்டார் என்பது எல்லோருக்கும் தெரியும். மரியாதை நிமித்தமாக அஜீ்த்குமாருக்கு நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்தது உண்மை. ஆனால் அவர் வருவார், வரவேண்டும் என்பதற்காக கொடுக்கவில்லை. கொடுத்திருந்தால் வந்திருப்பேன் என்று அவர் பின்னால் சொல்லவிடக் கூடாது.

ஒருமுறை அவர் கருணாநிதி விழாவிலேயே என்னை கம்ப்பெல் பண்றாங்க, வற்புறுத்தறாங்க என்று மேடையில் அநாகரிகமாக பேசியவர். அதனால் அவர் வரமாட்டார் என்று தெரிந்தும் அனைவருக்கும் கொடுத்தது போல அவருக்கும் முறையாக கொடுக்கப்பட்டது. அவர் வரவில்லை. அது அவரது பழக்கம். யாரும், அவர் வருவாருன்னு எதிர்பார்க்கவில்லை.

விஜய் அவர் ஒரு கட்சி ஆரம்பிப்பதால் அது பிஸியாக இருந்து வருகிறார். விழா நடந்த போது அவர் சென்னையில் இருந்தாரா, வெளியூரில் இருந்தாரா என எனக்கு தெரியாது. ஆனால் அவர் கட்சி துவங்குவதால், இந்த விழாவில் ஏதும் கான்ட்ரவர்சியல் ஆகக் கூடாது என்பதால் கூட வராமல் இருந்திருக்கலாம். அவர் இப்போது கட்சி துவங்குவதில் மும்முரமாக இருக்கிறார். திருநெல்வேலிக்கு போய் நலத்திட்ட உதவிகளை செய்திருக்கிறார் நல்ல விஷயம்.

அதனால் அந்த வேலைகளில் மும்முரமாக இருந்ததால் வராமல் போயிருக்கலாம், என்று அந்த நேர்காணலில் பேசி இருக்கிறார் ராஜன். அதாவது அஜீத்குமார் வர வாய்ப்பே இல்லை என்று தெரிந்துதான் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. அவர் வரமாட்டார் என்று தெரிந்தும் ஒரு மரியாதைக்காக அழைப்பிதழ் நேரில் தரப்பட்டது என தயாரிப்பாளர்களில் சீனியராக கே ராஜன் வெளிப்படையாக கூறியிருப்பது இப்போது வைரலாகி வருகிறது.

#image_title

Sumathi
Sumathi

Recent Posts

சீரியலுக்கு டாட்டா சொல்லிவிட்டு.. கணவருடன் புதிய தொழில் தொடங்கிய பிரியங்கா நல்காரி .. வைரல் புகைப்படங்கள்..!

தெலுங்கு சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘அந்தாரி பந்துவையா’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் பிரியங்கா…

3 hours ago

3d எஃபெக்டில், 10 மொழியில் கலக்க வரும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’.. ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ண படக்குழு..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…

17 hours ago

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…

18 hours ago

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

20 hours ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

20 hours ago

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

22 hours ago