Categories: சினிமா

அஜீத்துக்கு நேர்லே பத்திரக்கை கொடுத்தோம்.. அவர் பேசுனது ரொம்ப அநாகரிகம்.. கலைஞர் 100-க்கு அஜித் வராதது குறித்து பிரபல தயாரிப்பாளர் ஆவேசம்..

Spread the love

சமீபத்தில் கலைஞர் 100 விழா சென்னை, கிண்டி ரேஸ்கோர்ஸில் நடந்தது. இந்த விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் பங்கேற்றனர். விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். ஆனால் விழாவுக்கு எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த விழாவுக்கு அஜீத்குமார், விஜய் வராதது மிகப்பெரிய பிரச்னையாக பார்க்கப்பட்டது. இதுகுறித்து பலரும் விமர்சித்தனர். ஆனால் விஜயகாந்த் மறைவுக்கே அஜீத்குமார் நேரில் வராதவர் என்பதால் இந்த விழாவுக்கு அவர் வருவதற்கான சாத்தியமே இல்லை என்றும் பேசப்பட்டது. அதேபோல், சென்னையில் இருந்தும் இந்த விழாவுக்கு அஜீத்குமார் வரவில்லை.

இதுகுறித்து திரைப்படத் தயாரிப்பாளர் கே ராஜன் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியதாவது, இந்த விழாவில் அஜீத்குமார் கலந்துக்க மாட்டார் என்பது எல்லோருக்கும் தெரியும். மரியாதை நிமித்தமாக அஜீ்த்குமாருக்கு நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்தது உண்மை. ஆனால் அவர் வருவார், வரவேண்டும் என்பதற்காக கொடுக்கவில்லை. கொடுத்திருந்தால் வந்திருப்பேன் என்று அவர் பின்னால் சொல்லவிடக் கூடாது.

ஒருமுறை அவர் கருணாநிதி விழாவிலேயே என்னை கம்ப்பெல் பண்றாங்க, வற்புறுத்தறாங்க என்று மேடையில் அநாகரிகமாக பேசியவர். அதனால் அவர் வரமாட்டார் என்று தெரிந்தும் அனைவருக்கும் கொடுத்தது போல அவருக்கும் முறையாக கொடுக்கப்பட்டது. அவர் வரவில்லை. அது அவரது பழக்கம். யாரும், அவர் வருவாருன்னு எதிர்பார்க்கவில்லை.

விஜய் அவர் ஒரு கட்சி ஆரம்பிப்பதால் அது பிஸியாக இருந்து வருகிறார். விழா நடந்த போது அவர் சென்னையில் இருந்தாரா, வெளியூரில் இருந்தாரா என எனக்கு தெரியாது. ஆனால் அவர் கட்சி துவங்குவதால், இந்த விழாவில் ஏதும் கான்ட்ரவர்சியல் ஆகக் கூடாது என்பதால் கூட வராமல் இருந்திருக்கலாம். அவர் இப்போது கட்சி துவங்குவதில் மும்முரமாக இருக்கிறார். திருநெல்வேலிக்கு போய் நலத்திட்ட உதவிகளை செய்திருக்கிறார் நல்ல விஷயம்.

அதனால் அந்த வேலைகளில் மும்முரமாக இருந்ததால் வராமல் போயிருக்கலாம், என்று அந்த நேர்காணலில் பேசி இருக்கிறார் ராஜன். அதாவது அஜீத்குமார் வர வாய்ப்பே இல்லை என்று தெரிந்துதான் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. அவர் வரமாட்டார் என்று தெரிந்தும் ஒரு மரியாதைக்காக அழைப்பிதழ் நேரில் தரப்பட்டது என தயாரிப்பாளர்களில் சீனியராக கே ராஜன் வெளிப்படையாக கூறியிருப்பது இப்போது வைரலாகி வருகிறது.

#image_title

admin

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

7 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

7 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

7 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

7 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

7 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

8 மணத்தியாலங்கள் ago