“ஒழுங்கா இருங்க” இது தியேட்டர் இல்ல, ரேசிங் கிரவுண்ட்… ரசிகர்களால் கடுப்பான அஜித்… துபாயில் நடந்த அதிரடிச் சம்பவம்..!!

By Soundarya on மாசி 10, 2026

Spread the love

‘குட் பேட் அக்லி’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, நடிகர் அஜித் தனது முழு கவனத்தையும் கார் பந்தயங்களில் (Car Racing) செலுத்தி வருகிறார். தற்போது துபாயில் நடைபெற்று வரும் ரேசிங் பயிற்சிகளில் அவர் பங்கேற்று வருகிறார். அஜித்தைக் காண்பதற்காக அங்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். அப்போது சில ரசிகர்கள் உற்சாக மிகுதியில் எல்லை மீறி கத்தி கூச்சலிட்டு, பொது இடத்திற்குச் சம்பந்தமில்லாத வகையில் நடந்துகொண்டனர்.

இதனைப் பார்த்த அஜித், உடனடியாக ரசிகர்களிடம் சென்று அவர்களை அமைதிப்படுத்தினார். “ஒழுங்காக நடந்துகொள்ளுங்கள், இது ஒன்றும் சினிமா தியேட்டர் இல்லை” என்று மிகக் கடுமையான தொனியில் ரசிகர்களை எச்சரித்தார். பொது இடங்களில் கண்ணியத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்பதில் அஜித் எப்போதும் உறுதியாக இருப்பவர் என்பதற்கு இந்தச் சம்பவம் மற்றுமொரு உதாரணமாகப் பார்க்கப்படுகிறது. தனது ரசிகர்களாக இருந்தாலும், தவறு செய்யும்போது முகத்திற்கு நேராகக் கண்டிக்கும் அஜித்தின் இந்தச் செயலைப் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் “தல எச்சரிக்கை” என்ற பெயரில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.