அஜித் குமார் இன்றைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாத வசூல் மன்னராக திகழ்ந்து வருகிறார் அஜித் குமார். 62 படங்களை கொடுத்துவிட்டு 63 ஆவதாக மகிழ்திருமேனி இயக்கத்தில் ’விடாமுயற்சி’ என்ற படத்தில் தற்போது அவர் நடித்து வருகிறார். இந்த விடாமுயற்சி படமே அவர் விடாமல் முயற்சி செய்ததன் பலனாக தான் கிடைத்தது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. துணிவு படத்திற்கு பிறகு அவரது அடுத்த படத்திற்கான தேடல் என்பதே மிக நீளமாக இருந்தது.
முதலாவதாக விக்னேஷ் சிவன் கதை கூற அது ஓகே என முடிவு செய்து படப்பிடிப்பு தொடங்க இருந்த நேரத்தில், ஏதோ ஒரு காரணத்திற்காக அப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. அதன் பிறகு பல இயக்குனர்கள் அவரிடம் கதை கூற இறுதியாக மகிழ்திருமேனியினுடைய கதையை ஓகே செய்தார் அஜித் குமார். விஜயின் லியோ படத்துடன் அவரது 63 வது படமும் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்த வேளையில், விடாமுயற்சியினுடைய படப்பிடிப்பு கிடைப்பிலேயே போடப்பட்டது.
அஜித் எப்போதும் போல ஒரு சிறிய பிரேக் எடுத்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் உலக டூர் சென்றுவிட்டார். அதன் பிறகு ஒரு வழியாக நீண்ட இழுபரிக்கு பிறகு விடாமுயற்சியினுடைய படப்பிடிப்பு தற்போது தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 62 படங்களை கொடுத்துவிட்டு தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கக்கூடிய அஜித்திற்கு இப்பொழுதே இவ்வளவு பிரச்சனைகள் வருகிறது என்றால், அவர் நடிக்கத் துவங்கிய காலகட்டத்தில் அவருடைய பாதை எளிதாக இருந்திருக்கவே முடியாது. அதற்கு பல உதாரணங்கள் இங்கு உண்டு. அதில் ஒரு அதில் ஒரு உதாரணத்தை தற்பொழுது நாம் பார்க்கலாம்.
ஆனந்த பூங்காற்றே.. 1990 ஆம் ஆண்டு அஜித், மீனா, கார்த்திகா ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆனந்த பூங்காற்றே. ராஜ்கபூர் இயக்கியிருந்த இந்த படம் 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது இப்படம். அவருக்கு சாதாரணமாக அமைந்தது எனவே கூறலாம். எப்படி எனக் கேட்டால் ஆனந்த பூங்காற்றே படம் நடிப்பதற்கு முன்னதாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார் அஜித் குமார். படப்பிடிப்பு தளத்தில் தயாரிப்பாளர் அஜித்குமாரை தெரியாத தமிழில் சகட்டுமேனிக்கு திட்டி கொண்டு இருக்க, அந்த நேரத்தில் அங்கு சென்ற ஆனந்த பூங்காற்றேவின் படக் குழுவினர் அவரிடம் கதையை விளக்கி கூறும் முன்னரே கதையை கூட கேட்காமல் தனக்கு 22 லட்சம் ரூபாய் சம்பளமாக தர முடியுமா என கேட்டுள்ளார் அஜித்.
அதற்கு அப்படக் குழுவினர் உடனே ஓகே சொல்லி நாளை அலுவலகத்தில் வந்து சந்திக்குமாறு கூற கதை என்னவென்றே கேட்காமல் அஜித்குமார் ஒரே செக்கில் 22 லட்ச ரூபாயை பெற்றுக் கொண்டு நடித்தது தான் ஆனந்த பூங்காற்றே. சில சமயம் அவருக்கு அதிர்ஷ்டமும் ஒரு பக்கம் துணை இருக்கிறது என்பது இந்த சம்பவத்தின் மூலம் உறுதியாகிறது.