தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து ஒரு அதிரடியான கோரிக்கையை முன்வைத்துள்ளார். விஜய்யின் அரசியல் எழுச்சியைக் கொண்டாடும் விதமாக, “மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் சி. ஜோசப் விஜய்” என்று டைட்டில் கார்டு போட்டு அந்தப் படத்தை மீண்டும் ரிலீஸ் செய்யுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். கடந்த பொங்கல் பண்டிகையின்போது மிஸ் ஆன கொண்டாட்டங்களை, இந்த வெற்றியை முன்னிட்டு இந்த ஆண்டு முழுவதும் கொண்டாடப் போவதாகவும் அவர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார்.
இயக்குநரின் இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்கள் மத்தியில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. ஏற்கனவே இப்படம் சென்சார் விவகாரங்களால் வெளியாவதில் சிக்கல் நீடித்து வந்த நிலையில், தற்போது விஜய் முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள சூழலில் இத்தகைய டைட்டில் கார்டுடன் படம் வெளியானால் அது வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இருக்கும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ‘ஜனநாயகன்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது.
நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ உலகளவில் வெளியாகிக் திரையரங்குகளில் கொண்டாட்டப்பட்டு வரும் நிலையில், திரையரங்கில் படத்தைப் பார்த்த தவெக…
தமிழ்நாட்டில் சுமார் 4,000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகள் இயங்கி வரும் நிலையில், தினமும் பல நூறு கோடி…
தமிழகத்தில் லஞ்சம் மற்றும் ஊழலை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில், தமிழக வெற்றி கழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து…
ரயில் தண்டவாளத்தில் தற்செயலாக விழுந்த சிறு குழந்தையைக் காப்பாற்ற, தந்தை ஒருவர் தனது உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் அடுத்த நொடியே…
தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைத்துள்ள சூழலில், கட்சியின் உட்கட்டமைப்பை பலப்படுத்த அதன் தலைவரும் முதல்வருமான விஜய் தீவிர நடவடிக்கைகளை…
துருக்கியின் அங்காரா நகரில் வசித்து வரும் டெரின் டெனிஸ் என்ற பெண், கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தனது கணவரால் கொடூரமான…