#image_title
நடிகை ஐஸ்வர்யா ராய் மே 14ஆம் தேதி துவங்கப்பட்ட கேன்சர் திரைப்பட விழாவிற்கு கையில் பெரிய கட்டோடு கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் உலக அழகி ஐஸ்வர்யா ராய். 50 வயது தாண்டிய நிலையிலும் தற்போது இருக்கும் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் இருந்து வருகிறார்.
இவர் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகின்றார். கடைசியாக தமிழில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்த அசதி இருந்தார். ஹிந்தி திரை உலகில் முன்னணி நடிகையாக வளம் வரும் இவர் தனது மகள் ஆராத்யா பச்சனுடன் இணைந்து கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டார்.ஒவ்வொரு வருடமும் பிரான்ஸ் நாட்டில் இந்த கேன்ஸ் திரைப்பட விழா நடைபெறும்.
இதில் தவறாமல் கலந்து கொள்வதை வழக்கமாக வைத்திருக்கின்றார். ஐஸ்வர்யா ராய் தனது கையில் அடிபட்ட போதும் கூட அதனை பொருட்படுத்தாமல் இந்த விழாவில் அழகிய உடையில் வந்து கலந்து கொண்டிருக்கின்றார்.விமான நிலையத்திற்கு தனது மகளுடன் வந்த போது கையில் கட்டு போட்டு வந்திருந்ததை பார்த்து பலரும் என்ன ஆயிற்று என்று கேட்டு வந்தார்கள். கான்ஸ் திரைப்பட விழாவில் பேஷன் மற்றும் திரைப்படத் துறையை சார்ந்த பல பிரபலங்கள் வித்தியாசமான உடைகளை அணிந்து வந்து சிவப்பு கம்பளத்தில் அணிவகுப்பதை பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
கடந்த 20 வருடங்களாக தவறாமல் இந்த கேன்ஸ் விழாவில் கலந்து கொண்டு வரும் ஐஸ்வர்யா ராய் இந்த வருடமும் கையில் கட்டு போட்டுக்கொண்டு வித்யாசமான உடையில் சிவப்பு கம்பளத்தில் வந்தார். என்னதான் கையில் கட்டு போட்டு இருந்தாலும் இவரை ரசிப்பதற்கு தயாராக இருக்கின்றனர். இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சட்டவிரோதமாக இணையதளங்களில் கசிந்த 'ஜன நாயகன்' திரைப்படம், சில உள்ளூர் கேபிள் டிவி சேனல்களிலும் அனுமதியின்றி ஒளிபரப்பப்பட்ட சம்பவம் பெரும்…
மேற்கு ஆசியாவில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலியில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஈரானை…
சர்வதேச அரசியல் மேடையில் அமெரிக்கா மற்றும் கியூபா இடையிலான உறவு மீண்டும் ஒரு இக்கட்டான நிலையை எட்டியுள்ளது. குறிப்பாக, வெனிசுலாவின்…
சிரிப்புக்கும் குதூகலத்திற்கும் பெயர்போன 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி, தற்போது சர்ச்சைகளுக்கும் சென்டிமென்ட் காட்சிகளுக்கும் களமாக மாறியிருப்பது ரசிகர்கள் மத்தியில்…
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி ஏற்கனவே முடங்கியுள்ள நிலையில், தற்போது ஆசியாவின் மற்றொரு முக்கியப் பகுதியான…
தூத்துக்குடி மட்டக்கடை கோவில் தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியனின் மனைவி பிரேமா (58), தனது வீட்டில் வழக்கம்போல் குத்துவிளக்கு ஏற்றி வைத்து…