குஜராத் மாநில அகமதாபாத்தில் நேற்று முன்தினம் 242 பேருடன் சென்ற ஏர் இந்தியா விமானம் திடீரென்று அருகில் இருந்த மருத்துவக் கல்லூரி கட்டிடத்தின் மீது விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் குஜராத் மாநில முன்னாள் முதல் மந்திரி விஜய் ரூபாணி உட்பட 241 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அதேசமயம் விமானம் மருத்துவக் கல்லூரி கட்டிடத்தின் மீது விழுந்ததில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் பற்றி உருக்கமான தகவல்கள் வெளியாகி வருகின்றது. இப்படியான நிலையில் நெஞ்சை பதற வைக்கும் இந்த விமான விபத்துக்கு குறித்து முன்கூட்டியே பெலகாவியை சேர்ந்த சாமியார் ஒருவர் கணித்துக் கூறியுள்ளது தற்போது பகீர் கிளப்பி உள்ளது.
அதாவது கர்நாடக மாநிலம் பெலகாவி டவுன் நயா நகரில் சுத்தேவானந்தா சுவாமி மடம் ஒன்று உள்ளது. இந்த மடத்தின் மடாதிபதியாக இருப்பவர் அபினவ சித்தலிங்க சுவாமிஜி. இந்நிலையில் கடந்த ஏப்ரல் இருபதாம் தேதி மடத்தின் திருவிழா நடைபெற்ற சமயத்தில் இந்த சுவாமிஜி எதிர்காலத்தை கணித்து அருள்வாக்கு கூறியுள்ளார். அப்போது, எதிர்வரும் நாட்களில் பெரும் தீ விபத்து ஒன்று ஏற்படும். அதுவும் விமான விபத்தில் சிக்கி பயங்கரமாக தீப்பிடிக்கும். ஒரு நகரம் நாசமாகும் என்று அவர் கூறியிருந்தார். அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து பற்றி தான் சாமியார் கணித்துக் கூறியதாக பக்தர்கள் கூறி வருகிறார்கள். அதேசமயம் கடந்த ஏப்ரல் 20ம் தேதி கணித்து அருள்வாக்கு கூறிய வீடியோவும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் உருவான பெரும் அலையில் நாம்…
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வேட்பாளர் செங்கோட்டையன் சுமார் 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார…
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன. இதில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சி,…
தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று காலை…
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு திருப்பமாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது முதல்…
தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம்…