தீர்த்துக்கட்டிருவோம் எச்சரிக்கை… இதை எழுதவே அசிங்கமா இருக்கு… விஜய்யை கிழித்தெடுத்த அதிமுக…!!

By Soundarya on ஆனி 8, 2026

Spread the love

தமிழகத்தின் ஒப்பில்லா தலைவர்களான எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் திருப்பெயர்களோடு தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய்யின் பெயரை இணைத்து எழுதுவதே ஒரு வரலாற்று அசிங்கம் என்று அதிமுக ஐ.டி. விங் தனது எக்ஸ் (X) தளப் பதிவில் கடுமையாகச் சாடியுள்ளது. எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோர் மக்கள் பணிக்காகவும், திராவிடக் கொள்கைகளைக் காக்கவும் அடிமட்டத்திலிருந்து உழைத்து உயர்ந்த மாபெரும் தலைவர்கள் என்றும், அவர்களுடன் விஜய்யை ஒப்பிட முடியாது என்றும் அதிமுக விவரித்துள்ளது.

விஜய்யின் அரசியல் மற்றும் சினிமா வரலாற்றை விமர்சித்துள்ள அதிமுக, அவர் தனது தந்தையின் செல்வாக்கினாலும் சிபாரிசினாலுமே சினிமாவுக்குள் நுழைந்தார் என்றும், சொந்தப் பெற்றோர் மீதே வழக்குத் தொடர்ந்தவர் என்றும் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் கஞ்சத்தனமாக 500 ரூபாய் மட்டுமே நிதி கொடுத்தவர் என்றும், சாதாரண ட்விட்டர் விமர்சனத்தைக் கூடத் தாங்க முடியாமல் காவல் ஆணையர் அலுவலகத்தில் கதறிய வரலாறு தான் தவெக-வுக்கு உள்ளது என்றும் அநாகரிகமான குதிரை பேர அரசியலில் அவர்கள் ஈடுபடுவதாகவும் அதிமுக சாடியுள்ளது.

   

கரூரில் 41 மக்கள் உயிரிழந்த போது அதற்குப் பதில் சொல்லாமல் ஓட்டம் பிடித்த சக்திகள், மக்களுடன் எப்போதும் நிற்கும் அதிமுக-வை ‘தீர்ந்து போன சக்தி’ என்று விமர்சிப்பதா என கேள்வி எழுப்பியுள்ளது. தற்காலிக விபரீத யோகத்தால் ஆட்சிக்கு வந்துவிட்டு தமிழகத்தை அலங்கோலப்படுத்தும் சக்திகளைத் தீர்த்துக் கட்டப் போகும் மாபெரும் மக்கள் சக்தி அதிமுக தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என தவெக ஐ.டி. விங்கிற்கு அதிமுக எச்சரிக்கை விடுத்துள்ளது