திடீர் திருப்பம்…. எடப்பாடி அனுப்பிய ரகசிய கடிதம்… நயினாரை ஓடோடி சென்று சந்தித்த அதிமுக மூத்த தலைவர்கள்…. அடுத்து அன்புமணி தான் டார்கெட்….!

By Nanthini on புரட்டாதி 9, 2026

Spread the love

தமிழகத்தில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாஜவின் ஆதரவைக் கோரி அதிமுக மூத்த தலைவர்கள் சென்னை கமலாலயத்தில் பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரனை நேரில் சந்தித்துப் பேசினர்.

அப்போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கையொப்பமிட்ட அதிகாரப்பூர்வ ஆதரவுக் கடிதத்தை அவரிடம் வழங்கிய அதிமுகவினர், தேர்தல் களத்தில் பாஜகவின் ஆதரவை முறைப்படி வலியுறுத்தினர். இக்கோரிக்கை குறித்துக் கட்சித் தலைமையுடன் விரிவாக ஆலோசித்து விரைவில் நல்ல முடிவை அறிவிப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இச்சந்திப்பைத் தொடர்ந்து, கூட்டணி பலத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பாமக தலைவர் அன்புமணியைச் சந்தித்து ஆதரவு கோரவும் அதிமுக நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.