NDA கூட்டணியின் ‘அசல் பாஸ்’ யார்?… டெல்லியில் இருந்து வந்த ‘ஷாக்’ மெசேஜ்… மிரண்டு போன எடப்பாடி….!

By Nanthini on மாசி 7, 2026

Spread the love

2026-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணியில் யார் தலைமை வகிப்பது என்ற மோதல் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, கூட்டணியில் புதிய கட்சிகளை இணைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த பாஜக சார்பில் தனியாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிவிப்பு, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கமாக ஒரு கூட்டணியில் எந்தக் கட்சி தலைமையேற்கிறதோ, அந்தக் கட்சிதான் பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழுவை அமைக்கும். ஆனால், தமிழகத்தில் அதிமுக தங்களைத்தான் கூட்டணியின் தலைமை என்று கூறி வரும் நிலையில், பாஜகவின் இந்தத் தன்னிச்சையான முடிவு எடப்பாடி பழனிசாமி தரப்பிற்குப் பெரும் அழுத்தத்தைக் கொடுத்துள்ளது.

   

கடந்த சில மாதங்களாகவே கூட்டணி தொடர்பான முக்கிய முடிவுகளிலும், தொகுதிப் பங்கீடு விவகாரங்களிலும் பாஜக மேலிடப் பொறுப்பாளர்களே முன்னிலை வகித்து வருகின்றனர். பாமக, அமமுக போன்ற கட்சிகள் பாஜகவின் மத்திய அமைச்சர்களைச் சந்தித்த பிறகே கூட்டணியில் இணைந்தன. இதனால், பெயரளவில் மட்டுமே அதிமுக தலைமையில் கூட்டணி இயங்குகிறதா என்ற சந்தேகம் அரசியல் விமர்சகர்களிடையே எழுந்துள்ளது.

   

இந்தச் சூழலில், நயினார் நாகேந்திரனின் இந்த அதிரடி நடவடிக்கை தேசிய ஜனநாயக கூட்டணியின் ‘பாஸ்’ யார் என்ற கேள்வியை மீண்டும் வலுவாக்கியுள்ளது. இது அதிமுக மற்றும் பாஜக தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், வரும் நாட்களில் தொகுதிப் பங்கீட்டின் போது இரு கட்சிகளுக்கும் இடையே கடும் மல்லுக்கட்டு ஏற்படும் என்பதற்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.