தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தேசிய கட்சியான பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. பீகாரில் மாபெரும் வெற்றி பெற்ற NDA கூட்டணி அடுத்ததாக தமிழக அரசியலை எதிர்கொள்ள காத்திருக்கிறது. அதிமுக மற்றும் பாஜக இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தேர்தலை கருத்தில் கொண்டு இணைந்த இரண்டு கட்சிகள் இடையேயும் இப்போதும் கூட சில சச்சரவுகள் நிலவி வருகிறது. அதில் முக்கியமானது ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதுதான்.
கூட்டணி அமைந்ததில் இருந்தே இந்த கோரிக்கையை பாஜக முன்வைத்து வருகிறது. தமிழகத்தில் கூட்டணி என்பது வெற்றி பெறும் வரை மட்டும்தான். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற மரபே கிடையாது என அதிமுகவை சேர்ந்தவர்கள் கூறி வருகிறார்கள். ஆனால் பாஜகவை சேர்ந்தவர்கள் அதிமுக வெற்றி பெற்றால் அங்கு பாஜகவும் ஆட்சி அமைக்கும் என்று மறைமுகமாக கூறி வந்தனர். இது தொடர்பான விவாதம் இபிஎஸ் மற்றும் பாஜக தலைமைக்கு எழுந்துள்ளது.
இந்நிலையில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் இடம் தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா என்பது குறித்து 2026 தேர்தலுக்குப் பிறகு பேசலாம் என்று பதிலளித்துள்ளார். அதிமுக கூட்டணி ஆட்சியை அறவே மருத்துவரும் நிலையில் பாஜகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் இது குறித்து கேள்விக்கு கூட்டணி ஆட்சி தான் என்பது போன்ற தோணியில் பதிலளித்து வருவதை ஈபிஎஸ்-க்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மனித உரிமை காக்கும் கட்சித் தலைவரும் நடிகருமான கார்த்திக், சசிகலா…
தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலின் முதல்வர் வேட்பாளராகப் பார்க்கப்பட்ட அண்ணாமலை, தற்போது ஒரு தொகுதியில் கூட வேட்பாளராக…
கோயம்புத்தூர் வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், தனது இறுதிக்கட்டத் தேர்தல் பிரசாரத்தின் போது திமுக அரசை மிகக்…
ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக, அதன் இளம் நட்சத்திர வீரர் ஆயுஷ் மாத்ரே…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணியின் துரோகத்தை முறியடிக்குமாறு பாட்டாளி…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான இன்று, சென்னை நந்தனம் திடலில் உரையாற்றிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர்…