நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் அரசு சார்பில் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. நாட்டிலுள்ள நலிந்த விவசாயிகளுக்கு உதவுவதற்காக மத்திய மோடி அரசின் பி எம் கிஷான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6000 ரூபாய் நிதி உதவி மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. இந்த தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் இதுவரை மொத்தம் 17 தவணைகள் விடுவிக்கப்பட்டுள்ளன. அடுத்ததாக 18 வது தவணைத் தொகை நேற்று விடுவிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் விண்ணப்பித்த அனைவருக்கும் வந்து விடாது. சில காரணங்களால் சிலருக்கு பணம் வராமல் கூட போகலாம். ஒருவேளை உங்களுடைய கணக்கில் பணம் வரவில்லை என்றால் நீங்கள் கவலைப்பட வேண்டாம். கணக்கில் பணம் மாற்றப்பட்டதா என்பது பற்றி தெரிந்து கொள்ளவும் அது குறித்து புகார் அளிக்கவும் வசதி உள்ளது.
முதலில் pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று formers corner என்ற பிரிவின் பயனாளி நிலை என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் உங்களுடைய மொபைலில் நல்லது பதிவு எண்ணை உள்ளிட்டு Get Data என்பதை கிளிக் செய்ய வேண்டும். தற்போது பயனாளியின் நிலையில் KYC- க்கு முன் No என்று எழுதப்பட்டிருந்தால் உங்கள் தவணை பணம் இன்னும் வரவில்லை என்று அர்த்தம். உங்களுடைய கேஒய்சி புதுப்பிக்கப்படாவிட்டால் தவணை பணம் கணக்கில் வரவு வைக்கப்படாது.
நீங்கள் சரியாக பதிவு செய்து இருந்து உங்கள் கணக்கில் பணம் வரவில்லை என்றால் முதலில் அதை பற்றி புகார் அளிக்க வேண்டும். விவசாய அலுவலர் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் அல்லது 15561, 011-24300606 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம். அதேபோல, மின்னஞ்சல் ஐடி மூலம் தொடர்பு கொள்ள உங்கள் புகாரை pmkisan-ict@gov.in அல்லது pmkisan-funds@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத 'தொங்கு சட்டசபை'…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கியுள்ள நிலையில், 'தொங்கு சட்டசபை' (Hung Assembly) அமைவதற்கான வாய்ப்புகள் குறித்துப் பரவலான…
தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றி கழகம் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில், அக்கட்சியின் தொண்டர்களும்…
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே, காங்கிரஸ் பிரமுகர் நெல்சனின் வீட்டிற்குள் புகுந்து நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த கும்பல் நடத்திய…
திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் தற்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஐந்து சுற்று வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டுள்ள…
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை, அரை நூற்றாண்டு கால திராவிட அரசியல் வரலாற்றையே புரட்டிப் போடும் வகையில்…