தினமும் ரூ.5,000 சம்பாதிக்க ஆசையா? வேளாண் பல்கலைக்கழகத்தின் பயிற்சி… மக்களே இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க…!!

By Devi Ramu on மார்கழி 27, 2025

Spread the love

சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்கள் மற்றும் விவசாயிகளுக்காக, கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வரும் ஜனவரி 5, 2026 அன்று சிறப்பு காளான் வளர்ப்புப் பயிற்சியை நடத்த உள்ளது. சிப்பி மற்றும் பால் காளான்களைக் குறைந்த செலவில் வளர்ப்பது எப்படி என்பது குறித்து ஒரு நாள் பயிற்சியாக இது வழங்கப்படுகிறது.

வைக்கோலைப் பதப்படுத்துதல், வித்துகளை இடுதல் மற்றும் காளான் படுக்கைகளைத் தயாரிப்பது போன்ற தொழில்நுட்பங்கள் நேரடி செயல்முறை விளக்கங்களுடன் கற்றுத்தரப்படும். வீட்டில் இருந்தபடியே மிகக்குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்ட விரும்புவோருக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும்.

   

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்தப் பயிற்சியில், காளான்களைத் தரம் பிரிப்பது மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்த ஆலோசனைகளும் வழங்கப்படும். பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ், வங்கி கடன் பெறுவதற்கும் அரசு மானியங்களுக்கு விண்ணப்பிப்பதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

   

ஆர்வம் உள்ளவர்கள் அன்றைய தினமே நேரடியாகப் பல்கலைக்கழக வளாகத்திற்குச் சென்று தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். காளான் உணவுகளுக்கான தேவை சந்தையில் அதிகரித்து வருவதால், இத்தொழில் மூலம் நிலையான வாழ்வாதாரத்தை உறுதி செய்ய முடியும் எனப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.