![a 1 2 - Tamizhanmedia.net](https://tamizhanmedia.net/wp-content/uploads/2023/12/a-1-2-1.jpg)
CINEMA
இரண்டு பிரமாண்ட படத்திற்குபின் தமிழில் களமிறங்கும் பிரசாந்த் நீல்.. இந்த டாப் ஹீரோவோடு இணைகிறாராம்..!
தனக்கென தனி பாணியில் பிரம்மாண்ட ஆக்சன் திரைப்படங்களை கொடுத்து வரும் பிரபல இயக்குனர் தான் பிரசாந்த் நீல். இவர் இயக்கத்தில் 2018ல் நடிகர் யாஷ் நடிப்பில் வெளிவந்த ‘கேஜிஎப்’ திரைப்படம் கன்னட சினிமாவை மட்டுமல்ல ,இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது .அந்த அளவிற்கு இத்திரைப்படத்தில் பிரம்மாண்டத்தையும், ஆக்சன் காட்சிகளையும் காட்டி இருந்தார் இயக்குனர் பிரசாந்த் நீல்.
முதல் பக்கத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘கேஜிஎப் இரண்டாம் பாகம்’ வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. வசூலிலும் சக்க போடு போட்டது .தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக பிரபாஸ் மற்றும் பிரித்திவிராஜின் கூட்டணியில் சலார் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
நடிகர் பிரபாஸுடன் இணைந்து பிரித்விராஜ், ஸ்ருதிஹாசன், ஈஸ்வரி ராவ் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர். மேலும் சலார் திரைப்படம் நேற்று மட்டும் உலக அளவில் 160 இந்த கோடி முதல் 175 கோடி வரை முதல் நாள் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் சலார் திரைப்படத்திற்கு பிறகு கே ஜி எஃப் 3 திரைப்படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்க உள்ளார்.
இதைத்தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகர் ஒருவருடன் பிரசாந்த் நீல் கூட்டணி அமைக்க உள்ளார். யார் அந்த நடிகர் தெரியுமா.? அவர் வேறு யாரும் இல்லை நடிகர் அஜித்தான். நடிகர் அஜித் பிரசாந்த் நீலிடம் போன் செய்து ‘நாம் அடுத்த படம் இணைந்து பண்ணலாமா? என்று கேட்க அவரும் உடனே ஒப்புக் கொண்டாராம்’.
![agith1 - Tamizhanmedia.net](https://tamizhanmedia.net/wp-content/uploads/2023/12/agith1.webp)
#image_title
நடிகர் அஜித் தற்பொழுது விடாமுயற்சி மற்றும் அடுத்தடுத்து ஆதிக், வெற்றிமாறன் என வரிசையாக இயக்குனர்களுடன் கமிட்டாகி இருப்பதால் கே ஜி எஃப்3 திரைப்படத்திற்கு பிறகு, நடிகர் அஜித்தும், இயக்குனர் பிரசாந்த் நீலும் இணைய உள்ளார்களாம். சைலண்டாக அடுத்த பான் இந்திய திரைப்படத்துக்கு ரெடியாகிவிட்டார் நம்ம தல. இதை அறிந்த தல ரசிகர்கள் தற்பொழுது பயங்கர குஷியில் உள்ளனர்.