Connect with us

இந்தியா தோல்வியடைந்த பிறகு.. ட்ரெஸ்ஸிங் ரூமில் இந்திய வீரர்களை சந்தித்த பிரதமர் மோடி… வைரலாகும் வீடியோ…

CINEMA

இந்தியா தோல்வியடைந்த பிறகு.. ட்ரெஸ்ஸிங் ரூமில் இந்திய வீரர்களை சந்தித்த பிரதமர் மோடி… வைரலாகும் வீடியோ…

 

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியானது ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் நேற்று நடைபெற்று முடிந்தது. ஆனால் இந்த போட்டியில் சாம்பியன் பட்டத்தை ஆஸ்திரேலிய அணி ஆறாவது முறையாக வென்றது . இதன் மூலம் 12 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பை இந்திய அணி தவற விட்டிருக்கிறது.

   

இந்த தொடரில் ஒரு தோல்வியை கூட பெறாமல் தொடர்ந்து பத்து போட்டிகளில் ஆடிய இந்திய அணி கடைசியாக வெற்றி பெற வேண்டிய போட்டியில் தோல்வியை தழுவி இருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த போட்டியில் இந்தியா தோற்றத்திற்கு காரணம் ஆடுகளம் மோசமான முறையில் அமைக்கப்பட்டது என்று ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தொடர்ந்து பத்து போட்டிகளில் இந்திய அணி ரன் குவிப்புக்கு சாதகமான ஆடுகளத்தில் விளையாடிவிட்டு கடைசியில் இதுபோல் ஒரு மோசமான ஆடுகளத்தில் விளையாடியதால் தான் இந்திய அணி தோற்றதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆறாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆஸ்திரேலியா அணிக்கு 33 கோடி ரூபாய் பரிசு தொகையும், இறுதிப்போட்டி வரை வந்து தோல்வியை தழுவிய இந்திய அணிக்கு 16 கோடி ரூபாய் பரிசு தொகையும் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த உலகக்கோப்பை போட்டியை காண பிரதமர் நரேந்திர மோடி மைதானத்திற்கு வந்திருந்தது நாம் அனைவரும் அறிந்ததே. போட்டியில் தோல்வி அடைந்ததும் வீரர்கள் மைதானத்திலேயே கண் கலங்கி விட்டனர். அவர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் கண்கலங்கி அழுதனர். இந்நிலையில் பிரதமர் மோடி அவர்கள் வீரர்களின் ட்ரெஸ்ஸிங் ரூமிற்கு சென்று அவர்களை ஆறுதல் படுத்திய வீடியோ ஒன்று தற்பொழுது இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

Continue Reading
To Top