Connect with us

மகள் இறந்த ஒரு வராம் கூட ஆகல.. அதுக்குள்ள ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் விஜய் ஆண்டனி.. இதுதான் காரணமா..?

CINEMA

மகள் இறந்த ஒரு வராம் கூட ஆகல.. அதுக்குள்ள ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் விஜய் ஆண்டனி.. இதுதான் காரணமா..?

 

திரையுலகில் இசை அமைப்பாளராக ஒரு காலத்தில் கலக்கிக் கொண்டிருந்த விஜய் ஆண்டனி தற்பொழுது நடிப்பிலும் கலக்கி வருகிறார். இவர் ‘சுக்ரன்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவர் தற்பொழுது பல படங்களில் நடித்த வருகிறார். இவர் நடித்த ‘நான்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதோடு திரை உலகில் சிறந்த நடிகர் என்ற ஒரு அடையாளத்தையும் இவருக்கு ஏற்படுத்தித் தந்தது.

   

இதைத்தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலப்படுத்தியது. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான பிச்சைக்காரன் 2 மற்றும் கொலை ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளன.  நடிகர் விஜய் ஆண்டனி ஃபாத்திமா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மீரா, லாரா என்று இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்  தனது குடும்பத்துடன் சென்னை டி.டி.கே சாலையில் வசித்து வருகிறார். இவரது மகள் மீரா தனது அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் மீரா கடந்த ஒரு வருடமாக மனஅழுத்தத்திற்காக சிகிச்சை பெற்று வந்தது தெரியவந்தது.  மன அழுத்தம் காரணமாக அவர் இப்படியொரு விபரீத முடிவை எடுத்துள்ளார் என தெரியவந்தது.  சமீபத்தில் விஜய் ஆண்டனி தனது மகள் குறித்து சோசியல் மீடியாவில் உருக்கமாக கடிதம் ஒன்றை பதிவு செய்திருந்தார். அதில் ‘ என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள். தற்போது அவள் ஜாதி, மதம் , பணம் , பொறாமை அற்ற அமைதியான இடத்திற்கு சென்று இருக்கிறாள். நான் இப்பொது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்து விட்டேன் . அவள் பெயரில் நான் செய்ய போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும் அவளே தொடங்கி வைப்பாள்’ என குறிப்பிட்டிருந்தார்.

தன்னுடைய மகளின் இழப்பில் இருந்து வெளியே வர முடியாமல் விஜய் ஆண்டனி குடும்பமே தற்போது சோகத்தில் உறைந்துள்ளது.இந்நிலையில் விஜய் ஆண்டனி மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். அறிமுக இயக்குனர் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் ப்ரீ புரோடக்ஷன் பணிகள் மற்றும், படப்பிடிப்புக்கான அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாலும், தன்னால் தயாரிப்பாளர் நஷ்டத்தை சந்திக்கக்கூடாது என்கிற காரணத்தாலும், விஜய் ஆண்டனி சோகத்தை மறைத்து கொண்டு, பெங்களூருவில் நடந்து வரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் என கூறப்படுகிறது.

Continue Reading
To Top