தயிரை இப்படிச் சாப்பிடுறீங்களா…? ஆபத்து…! கோடைக்காலத்தில் இதைப் படிச்சிட்டுச் சாப்பிடுங்க…! நிபுணர்கள் சொல்லும் அட்வைஸ்…!!

By Devi Ramu on வைகாசி 5, 2026

Spread the love

கோடைக்காலத்தில் குளிர்ச்சிக்காகத் தயிரை விரும்பிச் சாப்பிட்டாலும், அதனைச் சரியான முறையில் உட்கொள்ளாவிட்டால் உடல் நலக் கோளாறுகள் ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தயிரை நேரடியாகவும் கெட்டியாகவும் சாப்பிடுவதைக் காட்டிலும், தண்ணீரில் கலந்து மோர் அல்லது லஸ்ஸியாக மாற்றிச் சீரகம் மற்றும் உப்பு சேர்த்துப் பருகுவதே செரிமானத்திற்குச் சிறந்தது. குறிப்பாக, குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுத்த உடனே சாப்பிடுவதைத் தவிர்த்து, அறை வெப்பநிலைக்கு வந்த பிறகு உண்பது வயிற்று உப்புசம் மற்றும் சருமப் பிரச்சினைகளைத் தவிர்க்க உதவும்.

தயிர் சாப்பிடுவதற்கு மதிய நேரமே மிகவும் உகந்தது; ஏனெனில் அந்தச் சமயத்தில் செரிமான மண்டலம் சுறுசுறுப்பாக இருக்கும். சளி, இருமல் மற்றும் சைனஸ் தொந்தரவு உள்ளவர்கள் இரவு நேரங்களில் தயிர் சாப்பிடுவதைத் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். முறையற்ற உணவுப் பழக்கம் உடல் சூட்டை அதிகரிப்பதோடு முகப்பருக்களையும் உண்டாக்கும் என்பதால், செரிமானக் குறைபாடு உள்ளவர்கள் நீர்த்த மோரை அருந்துவதே உடலுக்குப் பாதுகாப்பானது.