“அதிமுகவிலிருந்து அடுத்த விக்கெட் அவுட்?”… ஓ.எஸ்.மணியன் செய்த காரியம்.. குமுறும் மாவட்ட நிர்வாகி… அதிர்ச்சியில் இபிஎஸ்…!

Spread the love

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதிமுகவில் சீட் கிடைக்காத அதிருப்தியில் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து போர்க்கொடி தூக்கி வருகின்றனர். அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்ட அதிமுக நிர்வாகி செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மற்றும் பவுன்ராஜ் ஆகியோருக்கு எதிராக முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகுதியானவர்களைப் புறக்கணித்துவிட்டு, தேர்தலில் தோல்வியடையக் கூடிய நபர்களையே ஓ.எஸ்.மணியன் பரிந்துரைப்பதாக அவர் பகிரங்கமாகச் சாடியுள்ளார்.

கட்சியின் அடிப்படைத் தொண்டர்களுக்கும் உழைப்பவர்களுக்கும் உரிய அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை எனக் குற்றம்சாட்டிய செந்தில்நாதன், தனது ஒன்றிய கழகச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வரக்கூடாது என்ற உள்நோக்கத்துடன் மயிலாடுதுறை மாவட்டத்தில் பலவீனமான வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். குறிப்பாக, கடந்த தேர்தலைப் போலவே இந்த முறையும் உண்மையாக உழைத்தவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மீது சாதிய ரீதியான பாகுபாடு காட்டுவதாகவும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஓ.எஸ்.மணியன் தனது சாதியைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமையும் மரியாதையும் அளிப்பார் என்றும், மற்றவர்கள் திட்டமிட்டே புறக்கணிக்கப்படுவதாகவும் செந்தில்நாதன் தெரிவித்துள்ளார். “ஓ.எஸ்.மணியன் மற்றும் பவுன்ராஜ் ஆகிய இருவரின் செயல்பாடுகளால் மயிலாடுதுறையில் அதிமுக கூடாரம் காலியாகிக் கொண்டே செல்கிறது, அவர்கள் இருக்கும் வரை எங்களைப் போன்றவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை” என்று அவர் வேதனையுடன் குறிப்பிட்டார்.

இருப்பினும், தான் வேறு எந்தக் கட்சியிலும் இணையப் போவதில்லை என்றும், சாதாரண அதிமுக தொண்டனாகவே தொடர விரும்புவதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். கள்ளக்குறிச்சியில் அதிமுக நிர்வாகி ஒருவர் மேடையிலேயே ராஜினாமா கடிதத்தை அளித்துவிட்டுச் சென்ற சம்பவத்தைத் தொடர்ந்து, மயிலாடுதுறையிலும் ஏற்பட்டுள்ள இந்த உட்கட்சிப் பூசல் அதிமுக தலைமைக்கு கடும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இத்தகைய அதிருப்தி குரல்கள் கட்சியின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Nanthini

Recent Posts

BREAKING: கனிமவளங்கள் கடத்தல்.. முதல்வர் விஜய்யின் அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…

2 மணத்தியாலங்கள் ago

பறவையே உஷார்… “இது வாலு இல்ல, மரண வில்லன்” – நெட்டிசன்களை அதிரவைத்த வைரல் வீடியோ… அம்மாடியோ பயங்கரமா இருக்கே..!!

ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…

2 மணத்தியாலங்கள் ago

இரத்தக் கடலாக மாறிய கடற்கரை.. பாரம்பரியம் என்ற பெயரில் 700 திமிங்கிலங்கள், டால்பின்கள் கொடூர வேட்டை… உலகையே உலுக்கிய கொடூரம்..!!

ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…

3 மணத்தியாலங்கள் ago

“இனி இப்படித்தான்” வங்கிகளில் கோல்டு லோன்… RBI வங்கியின் அதிரடி அறிவிப்பு..!

வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…

3 மணத்தியாலங்கள் ago

பாவம்..! நடுரோட்டுல அனாதையா நிக்குறாரு விஜயபாஸ்கர்..எங்கே போறதுன்னு தெரியாம… திமுக அமைச்சர் ரகுபதி உருக்கம்..!!

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…

3 மணத்தியாலங்கள் ago

டிவி சேனல் தொடங்கும் முதல்வர் விஜய்… நிதி மற்றும் நிர்வாகப் பொறுப்பில் ஆதவ் அர்ஜுனா..!!

தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…

3 மணத்தியாலங்கள் ago