தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக எந்த முறை அதிமுக ஆட்சியை தமிழகத்தில் பிடித்து விட வேண்டும் என்ற நிலைப்பாடோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருப்பதால் முக்கிய நிர்வாகிகள் அதிருப்தியில் இருக்கும் காரணத்தால் கட்சித்தாவி வருகின்றனர். இதனால் இபிஎஸ்-க்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இப்படியான நிலையில் அதிமுகவை பொருத்தவரை கொள்கை நிலையானது என்றும் ஆனால் கூட்டணி சூழ்நிலைக்கு ஏற்றவாறு தேர்தலுக்காக அமைக்கப்படுவது என இபிஎஸ் தெரிவித்துள்ளார். மக்கள் விரோத திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பது அதிமுகவின் நிலைப்பாடு. அதேசமயம் ஊழல் நிறைந்த திமுக ஆட்சியை அகற்றப்பட வேண்டும் என்பது பாஜக நிலைப்பாடு என்று கூறினார். இருவருக்குமே ஒத்த கருத்து திமுகவை அகற்றுவது. அதனால்தான் கூட்டணி சேர்ந்திருப்பதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
