“கரூர் விவகாரத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தான் முழு காரணம்” என்று தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா அதிரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் இன்று (மார்ச் 8) நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர், உதயநிதி ஸ்டாலினுக்குப் போட்டியாக விஜய் உருவெடுத்துள்ளதால், அவரை முடக்கும் நோக்கில் திட்டமிட்டு இந்த விவகாரம் கையில் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு முறையான விசாரணை நடத்தியிருந்தால், இந்நேரம் தாம் சிறையில் இருந்திருப்பேன் என்றும், தன் மீதான விமர்சனங்களை எதிர்கொள்ளத் தயார் என்றும் அவர் கூறினார். விஜய்யின் அரசியல் வருகையைத் தடுப்பதற்காகவே கரூர் சம்பவத்தை முன்னிறுத்தி அரசியல் சூழ்ச்சிகள் செய்யப்படுவதாக ஆதவ் அர்ஜுனா தனது உரையில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
