BREAKING: “கோடி கோடியாக பணம்.. அமித்ஷா மகனுடன் சபரீசனுக்கு ரகசிய டீலிங்”…. திமுகவின் ரகசியங்களை உடைத்த தவெக…!

By Nanthini on சித்திரை 12, 2026

Spread the love

தமிழக அரசியலில் ஆளும் திமுகவிற்கும், புதிதாக களம் கண்டுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இடையிலான வார்த்தைப் போர் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. திமுக மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் வெவ்வேறு துருவங்களாகத் தெரிந்தாலும், உண்மையில் அவை இரண்டும் “கள்ளக்கூட்டணி” வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றி வருவதாக தவெக தலைவர் விஜய் தனது மேடைகளில் தொடர்ந்து சாடி வருகிறார். இரு கட்சிகளுக்கும் கொள்கை ஒன்றுதான் என்றும், திரைமறைவில் அவர்கள் ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டே வெளியே எதிரிகளைப் போல நாடகமாடுகிறார்கள் என்பதுமே விஜய்யின் பிரதான குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.

இந்த அரசியல் மோதலில் தவெகவின் முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் சமீபத்திய பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘ஜனநாயகன்’ திரைப்படம் முடக்கப்பட்ட விவகாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், மத்திய அமைச்சரும் கைகோர்த்துச் செயல்படுவதாகக் குறிப்பிட்ட அவர், தவெகவை வீழ்த்தவே இந்த இரு கட்சிகளும் மறைமுகமாக ஒன்றிணைந்துள்ளதாகத் தெரிவித்தார். குறிப்பாக, திரைப்படம் இணையத்தில் கசிந்த விவகாரத்திலும் இதே கூட்டுச் சதி நீடிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். பாஜகவிற்கு எதிராக திமுக பேசுவது வெறும் கண்துடைப்பு மட்டுமே என்பது ஆதவ் அர்ஜுனாவின் வாதமாக உள்ளது.

   

மேலும், திமுகவின் முக்கியப் புள்ளியான சபரீசனுக்கும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனுக்கும் இடையே தொழில்முறை ரீதியான நெருங்கிய உறவு இருப்பதாக ஆதவ் அர்ஜுனா பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். 2021-ல் திமுக வெற்றி பெற்ற பிறகு சபரீசன் அமித்ஷாவைச் சந்தித்ததாகக் குறிப்பிட்ட அவர், ரெட் ஜெயண்ட் மற்றும் பென் (PEN) போன்ற நிறுவனங்களுக்குக் கோடி கணக்கான பணம் எங்கிருந்து வருகிறது என்பது குறித்து அமலாக்கத்துறை ஏன் இதுவரை விசாரணை நடத்தவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இத்தகைய அடுக்கடுக்கான புகார்கள் தமிழக அரசியல் களத்தில் திமுக-பாஜக உறவு குறித்த புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.