மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் வரலாறு காணாத கனமழை பெய்துள்ளது. இடைவிடாது கொட்டிய இந்த கனமழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கி குளம்போல காட்சியளிக்கிறது. இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமலும், உணவு, குடிநீர் கிடைக்காமலும் தவித்து வருகின்றனர்.

மீட்பு பணிகள் நடைபெற்று வந்தாலும், புறநகரிலுள்ள பல்வேறு பகுதிகளில் இன்னும், அரசின் உதவி சென்றடையவில்லை. இந்நிலையில், தன்னார்வலர்களும், பல்வேறு தொண்டு நிறுவனங்களைச் சார்ந்தவர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றனர். பல்வேறு சினிமா பிரபலங்கள் நிஷா , kpy பாலா , கலா மாஸ்டர், நிக்கி கல்ராணி என வெள்ளத்திலும் மக்களுக்கு உதவி செய்து வந்தனர். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் பிரபல நடிகையான வினோதினி தனது இன்ஸ்டா பக்கத்தில் அரசை விமர்சித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது, “வெள்ளம் வந்தபோது 30 மணி நேரத்துல 30 ஆயிரம் டன் தண்ணி உள்ள வந்திருக்கு. ஓ நம்ம தண்ணி அளக்க மாட்டோமில்ல. அளக்கணும். சாமானிய மனிதனுக்கு புள்ளி விவரம் எல்லாம் சொல்லி தான் புரிய வைக்கணும். இந்த மக்கள் அரசாங்கத்தை குறை சொல்றாங்க. வருஷா வருஷம் வரி கட்டுனா இதெல்லாம் கேட்பாங்களா? வாய்க்கு வந்ததெல்லாம் கேப்பாங்களா?

என்ன அநியாயமான எதிர்பார்ப்புகள். நாட்டில் போர் வந்தா ஒரு நாலு பேரு போகத்தான் செய்வாங்க. எல்லாரையும் நம்ம எப்படிங்க காப்பாற்ற முடியும்? எல்லா வீட்டுக்கும் பால் வேணுமா? ஏன் நீங்க கருப்பட்டி காப்பி குடிக்க மாட்டிங்களா? நாமெல்லாம் தமிழ் பாலை குடிச்சு தானே வளர்ந்தோம். குழந்தைகளுக்கு எல்லாம் பால் வேணுமா? அதான் மழை வரப்போகுதுன்னு முன்கூட்டியே சொல்லியாச்சுல்ல. ஒரு 30, 40 நாளைக்கு முன்னாடியே பால் எல்லாம் வாங்கி வைக்க வேண்டியதுதானே. என்னது கெட்டுப்போயிருமா?

#image_title
2015ல் வெள்ளம் வந்தது தெரியுமா? EMI கட்டி கார் வாங்க தெரியுது. இல்ல வீட்டுக்கு ஒரு boat வாங்கி வாசலில் கட்டி வைப்பதற்கு என்ன? boat -யும் அரசாங்கம் தான் கொடுக்கணும்.” இதுபோல அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்துள்ளார். அவரின் இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ…
View this post on Instagram
