புற்றுநோயுடன் 3 வருட போராட்டம்.. உதவி கேட்டும் கண்டுகொள்ளாத பிரபலங்கள்.. சிகிச்சை பலனின்றி சீரியல் நடிகை மரணம்..

By Mahalakshmi on ஆனி 7, 2024

Spread the love

சினிமா மற்றும் சின்னத்திரையில் குணச்சித்திர நடிகையாக வலம் வந்த விஜயகுமாரி புற்றுநோய் காரணமாக நேற்று காலமானார். இந்த செய்தி தமிழ் திரையுலகனிரிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக புற்றுநோய் காரணமாக பல பிரபலங்கள் உயிரிழந்து வருகிறார்கள்.

   

கடைசியாக இளையராஜாவின் மகள் பவதாரணி புற்றுநோய் பாதிப்பால் உடல் நலம் குன்றி உயிரிழந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இருப்பினும் ஒரு சில பிரபலங்கள் புற்றுநோயை எதிர்த்து போராடி அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக மனுஷா கொய்ராலா, மம்தா மோகந்தா சொல்லிட நடிகைகளை நாம் கூறலாம் .

   

சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வரும் விஜயகுமாரி புற்றுநோய் பாதிப்பு காரணமாக கடந்த மூன்று வருடங்களாக போராடி வந்துள்ளார். இவருக்கு சரியான சிகிச்சை வழங்க யாரும் முன்வராக நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார். இவரின் மறைவு செய்தி கேட்ட பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

 

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த விஜயகுமாரி பல திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களிலும் சீரியல்களில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்திருக்கின்றார், இவருக்கு புற்றுநோய் வந்ததை தொடர்ந்து கேபிஒய் பாலாவிடம் உதவி கேட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருடன் நெருங்கி பணியாற்றிய சினிமா பிரபலங்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.