Categories: சினிமா

சத்யராஜால்தான் என் கேரியர் காலியானதா? கொளுத்திப் போட்ட ரசிகருக்கு விசித்ரா கொடுத்த பதில்!

Spread the love

தமிழ் சினிமாவில் 90 களில் கவர்ச்சி நடிகையாகவும், நகைச்சுவை நடிகையாகவும் வலம் வந்தவர் விசித்ரா. கவுண்டமணி செந்தில் கூட்டணியோடு இவர் நடித்த படங்கள் பெரியளவில் கவனம் பெற்றன. சில படங்களில் வில்லி வேடத்திலும் அவர் நடித்திருந்தார். ஆனால் திடீரென ஒரு கட்டத்தில் அவர் காணாமல் போனார்.

அதன் பின்னர் அவரின் ரி எண்ட்ரி தொடராக பிக்பாஸ் அமைந்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில், ஒரு போட்டியாளராக நடிகை விசித்ரா பங்கேற்று. அங்கு பாதி நாட்களுக்கு மேல் அவர் தாக்குப் பிடித்தார். ஒரு டாஸ்க்கில் பேசிய விசித்ரா, 2001ம் ஆண்டில், கேரளா மலம்புழாவில் ஷூட்டிங் நடந்த போது ஒரு பிரபல நடிகர் தன்னை ரூமுக்கு வரச்சொன்னதாக குற்றச்சாட்டை வைத்தார்.

மேலும் பேசிய தான் அந்த நடிகரின் அறைக்கு போகாததால், தங்கியிருந்த அறைக்கதவை கும்பலாக வந்து தட்டி மிரட்டியதாகவும் ஷூட்டிங் ஸ்பாட்டில், உடலில் பல இடங்களை கைவைத்த நபர்கள் குறித்து புகார் தெரிவித்ததால், ஸ்டண்ட் மாஸ்டர் கன்னத்தில் அறைந்ததாகவும் கூறியது, உடனடியாக டிரண்டிங் ஆனது. அந்த படம் 2001ல் எடுக்கப்பட்ட பலேவடிவி என்றும், ரூமுக்கு அழைத்தவர் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா என்றும், கன்னத்தில் அறைந்தவர் ஸ்டண்ட் மாஸ்டர் ஏ.விஜய் என்றும் தகவல் பரவி, வைரலானது.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் மண்டகசாயம் எனும் சமூகவலைதளப் பக்கத்தில் “தமிழ்ல விசித்ரா முன்னணி கதாநாயகியாக வந்திருக்க வேண்டியவர். ஆனால் சத்யராஜ் மாம்ஸால மிஸ் ஆயிடுச்சு” எனக் கூறியிருந்தார். இந்த பதிவுக்கு பதிலளித்த விசித்ரா சத்யராஜ் சார் தன்னுடைய நடிப்பை நம்பினார் என்று கூறியுள்ளார்.

மேலும் அந்த பதிவில் “சத்யராஜ் சார் என் மேல் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். அவர் இயக்கிய முதல் படமான வில்லாதி வில்லன் படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரத்தை கொடுத்தார். எனக்கு ஒரே மாதிரியான கேரக்டர் வந்ததால நல்ல கதாபாத்திரங்களில் என்னால் நடிக்க முடியாமல் போய்விட்டது” எனக் கூறியுள்ளார். சத்யராஜ் இயக்கிய வில்லாதி வில்லன் திரைப்படத்தில் விசித்ரா கொடூரமான ஒரு வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

vinoth

Recent Posts

தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி… UKG சிறுமிக்கு பாலியல் தொல்லை… காலையிலேயே பரபரப்பு…!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தேரடி பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில் பயின்று வரும் யு.கே.ஜி. மாணவிக்கு, அதே…

5 minutes ago

தமிழகமே அதிர்ச்சி… 10 சிறுவர்களை மிரட்டி மாறி மாறி ஓரினசேர்க்கையில் இருந்த பிளஸ் 2 மாணவன்… போனில் ஆபாச படம் பார்த்து செய்த கொடூரம்…!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே திருமுருகப்பட்டினம் கிராமத்தில், 9 வயது சிறுவன் ஒருவன் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனால் கொடூரமான…

15 minutes ago

“கெஞ்சினேன்… கேட்கவில்லை, எடுத்தேன் கத்தியை”… நள்ளிரவில் மாமனார் செய்த காரியமும், மருமகளின் அதிரடி வாக்குமூலமும்… அதிர்ச்சிப் பின்னணி…!

சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் மணிகண்டன், சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். கணவனை இழந்த அவரது…

25 minutes ago

“அண்ணாமலைக்கு 96% சான்ஸ் இல்லையாம்!”… ஜூலை 12-ல் நடக்கப்போகும் ‘அந்த’ சம்பவம்… அதிர வைக்கும் கணிப்பு…!

தமிழக அரசியல் களம் எப்போதும் சுவாரசியங்களுக்கும் பரபரப்புகளுக்கும் பஞ்சம் இல்லாத ஒன்றாகவே இருந்து வருகிறது. பா.ஜ.கவின் முன்னாள் மாநிலத் தலைவரான…

35 minutes ago

‘இனி சும்மா விடமாட்டோம்’… சவுதிக்கு ஏமன் ஹவுதிகள் விடுத்த பகீர் வார்னிங்… வான்வெளியில் நடந்த நடுக்கடல் பரபரப்பு…!

ஏமனில் செயல்பட்டு வரும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள், சவுதி அரேபியாவிற்கு எதிராக கடுமையான போர்க்கால எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.…

45 minutes ago

நெஞ்சை பதறவைக்கும் விசித்திரம்.. உயிருடன் பாம்பை விழுங்கும் ஒட்டகங்கள்…! அரபு நாடுகளின் பகீர் பின்னணி…!

பாலைவனக் கப்பல் என்று அழைக்கப்படும் ஒட்டகங்களுக்கு, அரபு நாடுகளின் சில கிராமப்புறப் பகுதிகளில் "ஹயாம்" என்ற விசித்திரமான நோய் பாதிப்பு…

55 minutes ago