Connect with us

‘விட்டா பிரதீப் டிரஸ் இல்லாம கூட வந்து நிப்பான்’… ஊரே பிரதீபுக்கு சப்போர்ட் பண்ணும் போது .. பிரதீப் பற்றி அதிரடியாக கருத்து கூறிய வனிதா…

CINEMA

‘விட்டா பிரதீப் டிரஸ் இல்லாம கூட வந்து நிப்பான்’… ஊரே பிரதீபுக்கு சப்போர்ட் பண்ணும் போது .. பிரதீப் பற்றி அதிரடியாக கருத்து கூறிய வனிதா…

 

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை வனிதா விஜயகுமார். பிரபல நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா ஆகியோரின் மகள் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் 1995 இல் வெளியான ‘சந்திரலேகா’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நட்சத்திரமாக விளங்குகின்றார். இவர்  பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமாக அதிக அளவில் பேசப்பட்டவர். இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார்.

   

நடிகை வனிதாவின் மூத்த மகளான ஜோவிகா தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 ல் கலந்து கொண்டுள்ளார்.  இன்னொரு வனிதாவாக அவர் தற்பொழுது கலக்கி வருகிறார். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் வனிதா. இவர் தொடர்ந்து தனது இணையதள பக்கத்தில் மகளுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தும், புகைப்படங்களை வெளியிட்டும், ஆதரவு திரட்டி கொண்டும் வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பிக் பாஸ் வீட்டின் முக்கிய போட்டியளர்களில் ஒருவரான பிரதீப் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். இதற்கு காரணமாக கூறப்பட்டது அவர் வீட்டில் இருந்தால் அங்குள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையாம். இவ்வாறு கூறி ஹவுஸ்மாட்ஸ் பலர் அவருக்கு ரெட் கார்டு கொடுத்து அதனடிப்படையில் கமல் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பினார்.

பிரதீப் ரெட் கார்டு வாங்கிக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்திருந்தாலும் தற்பொழுது அவரை மக்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் கமலஹாசனின் இந்த முடிவிற்கு எதிராக குரல் கொடுத்ததும் வருகின்றனர். இந்நிலையில் நடிகை வனிதா ‘ பிரதீப் ஆண்டனி மன ரீதியாக கடுமையான பாதிக்கப்பட்டு உள்ளார். இதனால் அவர் என்ன செய்கிறார் என்று அவருக்கே தெரியவில்லை.

கதவை திறந்து வைத்துக்கொண்டு நான் சிறுநீர் கழித்தேன் என்று சொல்கிறான். இன்னைக்கு இப்படி செய்தவன் நாளைக்கு பெண்கள் முன்பு அம்மணமாக வந்து நிற்பான். பிக் பாஸ் வீட்டில் இருக்க பிரதீப் தகுதியான ஆளே கிடையாது, இந்த விஷயத்தில் நான் கமல்ஹாசனை எடுத்த முடிவை நான் பாராட்டுகிறேன். பெண் பாதுகாப்பிற்காக அவர் எடுத்த முடிவுதான் சரி’ என்று கூறியுள்ளது பிரதீப் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading
To Top