மக்கள் அதிகம் விரும்பும் ரியாலிட்டி நிகழ்ச்சியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இருந்து வருகிறது. நம் மனதிற்கு பிடித்த பிரபலங்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் எப்படி இருக்கிறார்கள் என்பதை பார்ப்பதற்கே தனி கூட்டம் உள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிரிப்பு, அழுகை மற்றும் சண்டை என அனைத்துமே இருக்கும். கடந்த ஏழு வருடங்களாக இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் தற்போது விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் நேற்று தொடங்கிய நிலையில், முதல் ஆளாக தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் என்ட்ரி கொடுத்தார்.
அதனைத் தொடர்ந்து சாச்சனா, தர்ஷா குப்தா, தீபக், அரன்வ், ரவீந்தர் சந்திரசேகர் உள்ளிட்ட 18 பேர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். இதில் இன்று முதல் ஆளாக பிக் பாஸ் வீட்டை விட்டு மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்த சாச்சனா வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது. இனி ஒவ்வொரு வாரமும் நிகழ்ச்சியை மிக பரபரப்பாக செல்லும் என்பதால் குறிப்பாக விஜய் சேதுபதிக்காக நிகழ்ச்சியை காண ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் பிக் பாஸ் Vs வனிதா நிகழ்ச்சியை நடிகை வனிதா விஜயகுமார் தொடங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பேட்மேன் உள்ளிட்ட அனைவருக்கும் பல விஷயங்களை அவர் பகிர்ந்து உள்ளார். அதில், பிக் பாஸ் போட்டியாளர் முத்துக்குமார் எனக்கு நன்றாகவே தெரியும். அவன் சரியான கேடி பையன். ஒரு முறை என்ன இன்டர்வியூ எடுக்க வீட்டிற்கு வந்திருந்தான்.
அப்போது அடுத்த கல்யாணம் எப்போ எப்போ என்று திரும்பத் திரும்ப ஒரே வார்த்தையை கேட்டுக் கொண்டிருந்தான். உடனே உனக்கு என்னடா தம்பி பிரச்சனை அடுத்த கல்யாணம் பண்ணும் போது உனக்கு சொல்லி அனுப்புறேன் என்று அவனிடம் கூறினேன். எங்கிட்ட நல்லா வாங்கி கட்டிக்கிட்டு தான் போனா. அவன் ரொம்ப நல்ல பையன் மாதிரி தான் நடிப்பான், ஆனா சரியான கேடி பையன் என்று வனிதா விஜயகுமார் பேசியுள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான துரைமுருகன், இன்று கிளித்தான்பட்டறை பகுதியில் தீவிர…
சூரிய பகவான் மேஷ ராசியில் உச்சம் பெற்றுள்ள இந்த பெயர்ச்சி, மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், மகரம் மற்றும் கும்பம்…
இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'Happiest Places to Work' விருதுகள், வெறும் லாபத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு இயங்கும் நிறுவனங்களுக்கு ஒரு…
தமிழக வெற்றிக் கழகத்தின் முழுமையான தேர்தல் அறிக்கை இன்று மாலை 3 மணி அளவில் வெளியிடப்படும் என்று அக்கட்சியின் தலைவர்…
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…