தமிழ் சினிமாவில் 80’ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஊர்வசி. முந்தானை முடிச்சு என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமான இவர் அதற்கு முன்னதாக மலையாளத்தில் பிரபல நடிகையாக இருந்தார். நடிகர் பாக்கியராஜ் உடன் இணைந்து தான் நடித்த முதல் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டான நிலையில் தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடும் வாய்ப்பு கிடைத்தது.
தான் நடிக்க வந்த ஒரு வருடத்திலேயே கமலுடன் இணைந்து அந்த ஒரு நிமிடம் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அப்போது முன்னணி நடிகர்களாக இருந்த ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், பாக்கியராஜ் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். தற்போது தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் தனியார் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த ஊர்வசி அந்த ஒரு நிமிடம் படத்தில் நடந்த சில விஷயங்களை பகிர்ந்திருந்தார். அப்போது அந்த ஒரு நிமிடம் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று கமல் என்னிடம் வந்து இன்று மதியம் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடலாம். மதிய உணவு சிறப்பாக வரப்போகிறது என்று கூறினார். நாங்களும் பாசத்தில் சாப்பிட அழைக்கிறார் என்று அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட தயாரானாம்.
அப்போது கமல் குறுக்கிட்டு இந்த ஐட்டத்தை சாப்பிட்டு பாருங்கள். கனவாய் மீன் இது என்று அவர் கூறினார். எனக்கு மீன் என்றால் மிகவும் பிடிக்கும். எனவே நான் அதை எடுத்து சாப்பிட முயற்சித்தபோது நடிகை அனுராதா மெதுவாக எனது காதின் அருகில் வந்து சாப்பிட்டு விடாதே அது பாம்பு கறி என்று கூறினார். இதை கேட்டவுடன் அதிர்ச்சியாகி நான் பாம்பு கறியா என்று கத்தி விட்டேன்.
உடனே பாம்பு கறியா யார் சொன்னது என்று சுற்றி இருந்தவர்களை கமலஹாசன் கேட்க நான் கண்ணால் இவர் தான் தன்னை சாப்பிட வேண்டாம் என்று கூறினார் எனக் கூற அனுராதாவை ஏன் அப்படி சொன்னீர்கள் என்று கேட்டார். அதைத் தொடர்ந்து ஒரு அருகில் இருந்த பையனிடம் கேட்கும் போது அவரும் அது பாம்பு கறி தான் என்று கூறினார். எனக்கு மிகவும் பயமாகிவிட்டது. நான் உடனே அந்த இடத்தில் இருந்து ஓடி விட்டேன் என்று அவர் ஆச்சரியத்துடன் கூறினார்.
நடிகர் ஷாருக்கான் அவருடைய மனைவி கௌரிக்கான் மகள் மற்றும் மகன்களுடன் வாக்கு செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…
ஜூஸ் கடையில் தனது சிறு வயது வாழ்க்கையை தொடங்கி குறைந்த விலையில் கேசடுகளை விற்று இசையை மில்லியன் டாலர் வணிகமாக…
30 ஆண்டுகளுக்குப் பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவில் முதலாவதாக இந்திய திரைப்படம் ஒன்று போட்டியிடுகின்றது. பாயா கபாடியாவின் இயக்கத்தில் கோலிவுட்…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். ரசிகர்களால் தல என்று செல்லமாக அழைக்கப்பட்டு…
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்வீழ்ச்சிகளில்…
தமிழ் சினிமாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான சாக்லேட் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி காமெடி கதாபாத்திரங்களிலும், சந்தானத்தின்…