நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தின் சிறப்புக் காட்சியை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோர் ரசிகர்களுடன் இணைந்து திரையரங்கில் கண்டு மகிழ்ந்தனர். சூர்யாவின் மிரட்டலான நடிப்பும், படத்தின் கதைக்களமும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ள நிலையில், திரையுலக பிரபலங்களும் படத்தைப் பார்த்துவிட்டுத் தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் சிறப்புக் காட்சி முடிந்து நடிகை த்ரிஷா திரையரங்கை விட்டு வெளியேறியபோது, அங்கிருந்த ரசிகர் ஒருவர், “தளபதியைக் (விஜய்) கேட்டதா சொல்லுங்க…” என்று குரல் கொடுத்தார். இதைக் கேட்டுப் புன்னகைத்த த்ரிஷா, சற்றும் தயங்காமல் ‘கண்டிப்பா’ என்று பதிலளித்துவிட்டுச் சென்றார். த்ரிஷாவின் இந்தப் பதிலைக் கேட்டு உற்சாகமடைந்த ரசிகர்களின் ஆரவாரம் அடங்க நீண்ட நேரம் ஆனது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, விஜய் மற்றும் சூர்யா ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூரில் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே…
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தேரடி பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில் பயின்று வரும் யு.கே.ஜி. மாணவிக்கு, அதே…
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே திருமுருகப்பட்டினம் கிராமத்தில், 9 வயது சிறுவன் ஒருவன் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனால் கொடூரமான…
சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் மணிகண்டன், சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். கணவனை இழந்த அவரது…
தமிழக அரசியல் களம் எப்போதும் சுவாரசியங்களுக்கும் பரபரப்புகளுக்கும் பஞ்சம் இல்லாத ஒன்றாகவே இருந்து வருகிறது. பா.ஜ.கவின் முன்னாள் மாநிலத் தலைவரான…
ஏமனில் செயல்பட்டு வரும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள், சவுதி அரேபியாவிற்கு எதிராக கடுமையான போர்க்கால எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.…