நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தின் சிறப்புக் காட்சியை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோர் ரசிகர்களுடன் இணைந்து திரையரங்கில் கண்டு மகிழ்ந்தனர். சூர்யாவின் மிரட்டலான நடிப்பும், படத்தின் கதைக்களமும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ள நிலையில், திரையுலக பிரபலங்களும் படத்தைப் பார்த்துவிட்டுத் தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் சிறப்புக் காட்சி முடிந்து நடிகை த்ரிஷா திரையரங்கை விட்டு வெளியேறியபோது, அங்கிருந்த ரசிகர் ஒருவர், “தளபதியைக் (விஜய்) கேட்டதா சொல்லுங்க…” என்று குரல் கொடுத்தார். இதைக் கேட்டுப் புன்னகைத்த த்ரிஷா, சற்றும் தயங்காமல் ‘கண்டிப்பா’ என்று பதிலளித்துவிட்டுச் சென்றார். த்ரிஷாவின் இந்தப் பதிலைக் கேட்டு உற்சாகமடைந்த ரசிகர்களின் ஆரவாரம் அடங்க நீண்ட நேரம் ஆனது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, விஜய் மற்றும் சூர்யா ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, ஆர்சிபி (RCB) பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மயந்தி லாங்கரிடம் பேசுகையில், இந்திய…
இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் (BRICS) மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, மேற்காசியாவில் நிலவி வரும்…
குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டத்தில் நடைபெற்ற பஜனை நிகழ்ச்சியில் (டயரோ), பிரபல பாடகர் ஜிக்னேஷ் கவிராஜ் மீது ரசிகர்கள் கோடிக்கணக்கான…
கேரள முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் விஜய்க்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த கேரள சட்டமன்றத்…
பிரான்ஸின் லியோன் நகரைச் சேர்ந்த 19 வயதான கிளியோ வெர்டியர், கடந்த 2025 ஜூன் மாதம் கடும் மன உளைச்சல்…
பிரான்ஸின் சௌன்-எட்-லோயர் (Saône-et-Loire) பிராந்தியத்தில் உள்ள காடுகளில் மான்கள் சில விசித்திரமாக நடந்து கொள்வது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒரு மான்…