CINEMA
கல்யாணம் ஆன புதிதில்…. “நானும், அவரும் இப்படிதான்”…. நடிகை சுஹாசினி ஓபன் டாக்…!!
தென்னிந்திய திரைப்பட நடிகை, தயாரிப்பாளர், இயக்குனரான சுஹாசினி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இயக்குனர் மணிரத்தினத்தை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு நந்தன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நடிகை சுஹாசினி ஒரு சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில் அளித்த பேட்டியில், நிகழ்ச்சி தொகுப்பாளர் உங்கள் கணவரை நீங்கள் எப்படி கூப்பிடுவீர்கள்? என கேட்டதற்கு, சுஹாசினி கல்யாணம் ஆன புதிதில் மம், உஷ், ஆ என்றுதான் கூப்பிடுவேன். அதன் பிறகு ஒரு வாரம் கழித்து எனது கணவர் கூறிய பிறகு அவரது பெயரை வைத்தே “மணி” என்று தான் கூப்பிடுவேன் என கூறினார். இதேபோல எனது கணவர் என்னை “சு” என்று தான் அழைப்பார் என சிரித்துக் கொண்டே நடிகை சுஹாசினி கூறியுள்ளார்.
View this post on Instagram