Connect with us

2,3 தடவை கரு கலைஞ்சிருச்சு.. 8 வருடங்களுக்கு அப்புறம் தான் இவன் பிறந்தான்.. கஷ்டங்களை பகிர்ந்த நடிகை ஸ்ரீஜா..!!

CINEMA

2,3 தடவை கரு கலைஞ்சிருச்சு.. 8 வருடங்களுக்கு அப்புறம் தான் இவன் பிறந்தான்.. கஷ்டங்களை பகிர்ந்த நடிகை ஸ்ரீஜா..!!

 

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர்கள் செந்தில் ஸ்ரீஜா தம்பதியினர். இந்த சீரியல் சூப்பர் ஹிட் ஆனது. கடந்த 2014-ஆம் ஆண்டு செந்திலும் ஸ்ரீஜாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 8 ஆண்டுகள் குழந்தை இல்லை. பின்னர் கடந்த 2023-ஆம் ஆண்டு ஸ்ரீஜாவுக்கு தேவ் என்ற ஆண் குழந்தை பிறந்தது.

Senthil Sreeja,நாம் இருவர் நமக்கு இருவர் நடிகர் செந்தில் வீட்டில் விசேஷம்! ஸ்ரீஜா உடன் எடுத்த போட்டோ வைரல் - senthil and sreeja at sister wedding function: photo goes viral ...

   

இந்நிலையில் செந்தில் ஸ்ரீஜா தம்பதியினர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது, தேவ் பிறப்பதற்கு முன்னதாக 2,3  முறை கரு உண்டாகி கலைந்து விட்டது. நாங்கள் இரண்டு பேருமே குழந்தையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் எதிர்பார்ப்பு நனவாகவில்லை. ஒரு நாள் மீண்டும் கர்மமாக இருக்கிறேன் என ஸ்ரீஜா கூறியபோது செந்தில் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சரி கொஞ்ச நாள் போகட்டும் பார்க்கலாம் என்று கூறினார்.

திருமணமாகி 8 வருடங்களுக்கு பின் ஸ்ரீஜா கர்ப்பம்! வளைகாப்பு புகைப்படங்கள்

நாங்கள் வாழ்க்கையில் பட்ட வேதனைகள் ஏராளம். மகிழ்ச்சியான செய்தியை முதலில் குடும்பத்திடம் சொல்லி குதூகலப்படுத்தி விடுவோம். அதன் பிறகு அவர்களிடம் அப்படி இல்லை என்று சொல்லும் போது அவர்கள் மிகவும் வருத்தப்படுவார்கள். குழந்தை இல்லை என்று வருத்தப்பட்டதை விட சுற்றி இருப்பவர்கள் வருத்தம் தான் மிகவும் அழுத்தத்தை உள்ளாக்கியது.

PHOTOS: மகனின் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடிய மிர்ச்சி செந்தில்- ஸ்ரீஜா.. லேட்டஸ்ட் க்ளிக்ஸ் | Television Actor Mirchi Senthil Srija Celebrates Their Child 1st Birthday Latest ...

காதல் திருமண வாழ்க்கையில் நடக்கும் குழப்பங்கள் எங்களுக்கும் நடந்தது. காதல் திருமணமாக இருந்தாலும் வீட்டில் பார்த்து செய்து திருமணம் ஆக இருந்தாலும் முதல் மூன்று வருடங்களை எப்படியாவது கடந்து விட வேண்டும். கேமராவுக்காக வேண்டுமானால் பொய் பேசலாம். உண்மையில் எங்களுக்குள் அவ்வளவு சண்டை நடந்து இருக்கிறது. மோசமான சூழ்நிலைகளை எதிர்கொண்டோம். மகன் பிறந்து விட்டதால் இப்போது சண்டை போட நேரம் கிடைக்கவில்லை என ஸ்ரீஜா எமோஷனலாக பேசியுள்ளார்.

author avatar
Priya Ram
Continue Reading
To Top