Categories: சினிமா

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் அம்மாவை பாத்துருக்கீங்களா?… இதுவரை நீங்கள் பார்த்திடாத புகைப்படம் இதோ….

Spread the love

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் மனதிலும் நீங்காத ஆழமான இடத்தை பிடித்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.  1963ல்  தனது நான்காம் வயதில் ‘துணைவன்’ என்ற திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

இதை தொடர்ந்து அவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.1976 இல் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் உடன் ‘மூன்று முடிச்சு’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். ஃபிலிம் ஃபேர் உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற ஸ்ரீதேவி இந்திய அரசின் ‘பத்மஸ்ரீ விருதையும்’ பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இந்தி திரைப்பட தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்து கொண்டார்.

இவர் திருமணத்திற்கு பின் நடிப்பதில் இருந்து நீண்ட இடைவெளி எடுத்து கொண்டார். பின்னர் 15 ஆண்டுகளுக்கு பின் இவர் நடித்த ஹிந்தி மற்றும் தமிழில் வெளியான ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. 2017ல்  ‘மம்’ எனும் இந்தி திரைப்படத்தில் இவர் கடைசியாக நடித்தார். இது அவரது 300 வது திரைப்படம்.

நடிகை ஸ்ரீதேவி நெருங்கிய உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக துபாய்க்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். அங்கு திருமணத்தில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என இருந்த அவர் பிப்ரவரி 24 – 2018ல் துபாயில் தங்கி இருந்த ஹோட்டல் அறையில் உயிரிழந்தார். நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தை தொடர்ந்து அவரது குடும்பம் பெரும் சோகத்தில் மூழ்கியது.

நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி தற்பொழுது பாலிவுட்டில் கால்பதித்து கலக்கி வருகிறார். நேற்று நடிகை  ஸ்ரீதேவியின் பிறந்தநாள் என்பதால் அவரை நினைவுகூர்ந்து மகள் ஜான்வி கபூர் இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார். ஸ்ரீதேவி ஷூட்டிங்கில் அவரது அம்மா மடியில் அமர்ந்து இருக்கும் போட்டோவை வெளியிட்டு அவர் உருக்கமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த பதிவு…

Begam

Recent Posts

அமைச்சரவையில் இருந்து தூக்கப்படும் சரத்குமார்?…. CM விஜய் எடுத்த அதிரடி முடிவு…. பரபரக்கும் கோட்டை…. உற்றுநோக்கும் அரசியல் களம்….!

அமைச்சரவையில் இருந்து அமைச்சர் சரத்குமார் விரைவில் நீக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான தகவல்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன. சமீபத்தில்…

13 minutes ago

“லைக் போட்டா திருப்பதி லட்டு பிரசாதமா?”…. தேவஸ்தானத்தை உலுக்கிய தமிழக வாலிபரின் ஷாக்கிங் வீடியோ… தேவஸ்தானம் அதிரடி பாய்ச்சல்….!

சமூக வலைதளங்களில் லைக், ஷேர் மற்றும் ஃபாலோயர்ஸ்களைப் பெறுவதற்காக, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதமான லட்டு பிரசாதத்தைப் பயன்படுத்துவதாக எழுந்த…

21 minutes ago

“அறைக்கு வா… வெளில யார்கிட்டையும் சொல்ல கூடாது”…. மாணவிகளிடம் தலைமை ஆசிரியர் செய்த அசிங்கம்…. இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி….!

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பள்ளிவிடையில் இயங்கி வரும் அரசு உதவிபெறும் உயர்நிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்த…

29 minutes ago

“அரசுப் பள்ளிச் சாம்பாரில் கொடூரம்”…. மாணவி கையில் சாணிப்பவுடர் கொடுத்து செய்யச் சொன்னது யார்?…. சத்தியமங்கலத்தில் பகீர்…. கொந்தளித்த வானதி சீனிவாசன்…!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ராமபையனூர் அரசு நடுநிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்டச் சாம்பாரில், அதே ஊரைச் சேர்ந்த…

36 minutes ago

அடுத்த பிரதமர் விஜய்யா?…. கடுப்பான ராகுல் காந்தி… போன் போட்டு சமரசம் செய்த மாணிக்கம் தாகூர்…. அறிவாலயத்தையும் டெல்லியையும் அதிர வைத்த அந்த ஒரு அறிக்கை…..!

தேசிய அரசியலில் அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்த விவாதம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. சமீபத்தில் வெளியான முன்னணி கருத்துக்கணிப்பு…

47 minutes ago

“ரயிலில் துர்நாற்றம் வீசிய அந்த சிவப்பு சூட்கேஸ்”…. கூடுவாஞ்சேரி கொலை வழக்கில் அடுத்தடுத்து அம்பலமாகும் பகீர் உண்மைகள்…. போலீசுக்கு பறந்த பரபரப்பு கடிதம்….!

சென்னை கூடுவாஞ்சேரியில் அரங்கேறியுள்ள கொடூரக் கொலை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹயாதுன் நிஷா (38) என்ற…

52 minutes ago