Connect with us

CINEMA

அன்று பார்த்த அதே அழகில் ஜொலிக்கும் நடிகை சோனியா அகர்வால்… சேலையில் வெளியிட்ட சொக்க வைக்கும் புகைப்படங்கள்…

தெலுங்கு திரை உலகில் அறிமுகமாகிய பின்னர் தமிழில் இயக்குனர் செல்வராகவன் இயக்கிய ‘காதல் கொண்டேன்’ படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் நடிகை சோனியா அகர்வால். முதல் படத்திலிருந்து இயக்குனர் செல்வராகவனும் இவரும் காதலிக்கத் தொடங்கினர். இதனை உடனடியாக அவர்கள் வெளிப்படுத்தவில்லை. ஆனாலும் தொடர்ந்து இவர்களை பற்றி சில காதல் கிசுகிசுக்கள் வந்து கொண்டே இருந்தன.

   

இதை தொடர்ந்து 7G ரெயின்போ காலனி, மதுர, கோவில், திருட்டுப்பயலே என தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்தார். புதுப்பேட்டை படத்திற்கு பின்னர் இருவரும் தங்களுடைய காதலை வெளிப்படுத்தி பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். 2006ல் செலவரகவானை திருமணம் செய்து கொண்ட பின் சோனியா அகர்வால் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.

இதை தொடர்ந்து இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட 2010ல்  முறையாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். விவாகரத்து பெற்று 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் இவர் தனித்தே வாழ்ந்து வருகிறார். தற்பொழுது படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை சோனியா அகர்வால். தற்பொழுது இவர் சேலையில் வெளியிட்ட புகைப்படங்கள் இளைஞர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறது. இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘இன்னும் அதே அழகில் ஜொலிக்கிறாங்களே’ என்று வர்ணித்து உருகி வருகின்றனர்.

Continue Reading

More in CINEMA

To Top