Connect with us

அப்பா பிரசன்னாவை அப்படியே உறித்து வைத்திருக்கும் நடிகை சினேகாவின் மகன்.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ..

CINEMA

அப்பா பிரசன்னாவை அப்படியே உறித்து வைத்திருக்கும் நடிகை சினேகாவின் மகன்.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ..

 

நடிகை சினேகா தனது மகன் விகானுடன் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்து ரசிகர்கள் பலரும் அப்பா பிரசன்னாவை அப்படியே உறித்து வைத்திருக்கின்றார் என்று கூறி வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாகவும் 20’ஸ்களில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை சினேகா. சினிமாவில் எத்தனையோ நடிகைகள் வந்து போனாலும் ஒரு சில நடிகைகள் மட்டும் மவுஸ் குறையாமல் அப்படியே இருப்பார்கள். அப்படிப்பட்ட நடிகை தான் சினேகா.

   

42 வயதிலும் இரண்டு குழந்தைக்கு தாயான பின்னரும் கூட இளமையாக இருந்து வருகின்றார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை சினேகா. நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விளக்கிய இவர் குழந்தை பெற்ற பிறகு பல நிகழ்ச்சிகளுக்கு நடுவராகவும் ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்த வருகிறார்.

அந்த வகையில் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் கோட் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கின்றார். அதாவது நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் தந்த விஜய்க்கு ஜோடியாக சினேகா நடித்துள்ளார் .திருமணத்திற்குப் பிறகு தான் நடிக்கும் வேடங்களில் முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்து வருகிறார் நடிகை சினேகா.

பிரசன்னா மற்றும் சினேகா தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் .மகன் விகான் மற்றும் மகள் ஆதியானந்தா. சினிமா, பிசினஸ், குடும்பம் என அனைத்தையும் சமாளித்து வரும் சினேகா தினமும் ஒர்க்அவுட் செய்பவர். அதனால் தான் அவர் இப்போதும் இளமையாக இருக்கின்றார்.

இந்நிலையில் நடிகை சினேகா தனது மகனுடன் ஒர்க் செய்யும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அம்மாவுக்கே டப் கொடுக்கும் வகையில் அவர் வொர்கவுட் செய்யும் விதத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் அவர் பார்ப்பதற்கு அவரது தந்தை பிரசன்னா போலவே இருக்கிறார் எனவும் கூறுகிறார்கள்.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top