தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சினேகா. இவர் மும்பையை பூர்வீகமாகக் கொண்டவர்.
இவர் தந்தை ராசாராம் தாய் பார்வதி. இவருடைய இயற்பெயர் சுகாசினி ராஜாராம். ஓன் ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார்.
அதன் பிறகு 2000 ஆம் ஆண்டு ‘என்னவளே’ என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
பிரபல நடிகர் மம்முட்டியுடன் இணைந்து ‘ஆனந்தம்’ என்ற படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தின் மூலம் தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
இவர் தமிழில் புன்னகை தேசம், உன்னை நினைத்து, விரும்புகிறேன் போன்ற படங்களுக்கு விருதை பெற்றுள்ளார். இவர் தமிழில் சுமார் 70 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் புன்னகை அரசி என்று பலராலும் அழைக்கப்படுவார் நடிகை சினேகா.இவர் தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.நடிகை சினேகாபிரசன்னா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகி தன் குடும்பத்தை கவனித்து வந்தார்.இவர்களுக்கு விஹான் என்ற ஆண் குழந்தை ஆத்யந்தா என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.
இவர் நடிகை மட்டுமல்ல சரவணா ஸ்டோர், ஹார்லிக்ஸ், ஆசிர்வாத் போன்ற விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.
நடிகை சினேகா மீண்டும் சினிமாவில் நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் .இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர்.
ZEE தமிழ் டிவியில் ஒளிபரப்பான ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ ரியாலிட்டி ஷோவில் நீதிபதியாக பணியாற்றினார். சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்க கூடியவர். தற்போது நடிகை சினேகா தனது மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அது மட்டுமல்லாமல் தனது குடும்பத்துடன் தனது மகனின் 8வது பிறந்த நாளை பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளார்.அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில்வெளியாகி வைரலாகி வருகிறது.
பெங்களூருவில் வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் வந்த திருமண அழைப்பிதழ் ஒன்றைப் பதிவிறக்கம் செய்த தொழிலதிபர் ஒருவர், தனது வங்கிக் கணக்கிலிருந்து…
அண்டை கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனின் ஆடம்பரமான வீடு மற்றும் வசதிகளைக் கண்டு ஈர்க்கப்பட்ட 26 வயது இளம்பெண், தனது…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தகவலின்படி, அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ-வும், ஓய்வுபெற்ற டிஜிபி-யுமான ஆர். நடராஜ் விரைவில் தமிழக…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) புதுக்கோட்டை மத்திய மாவட்டச் செயற்குழு உறுப்பினரான சரவணன், ₹20 கோடி மோசடி புகாரில் போலீசாரால்…
பெங்களூருவில் ரேபிடோ (Rapido) பைக் டாக்ஸி சேவையைப் பயன்படுத்திய பெண் ஒருவர், பயணம் முடிந்த பிறகு அந்த வாகன ஓட்டுநர்…
தமிழக முதல்வர் விஜய், மாநிலத்தில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை இரண்டு வார காலத்திற்குள் மூடுவதற்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதாக…