Categories: சினிமா

25 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித்துடன் இணையும் பிரபல நடிகை.. இவங்க ஜோடினாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்…!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி கொண்டிருக்கும் அஜித் நடிப்பில் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 1200 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டி வருகின்றது. இதனைத் தொடர்ந்து அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தை ஆதித் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள நிலையில் இந்த திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் பத்தாம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்தப் படத்தின் பணிகள் ஏறத்தாழ நிறைவடைந்துள்ள நிலையில் அஜீத் தற்போது கார் ரேசில் முழு கவனம் செலுத்தி வருகின்றார்.

கடந்த மாதம் துபாயில் நடந்த கார் பந்தயத்தில் கலந்து கொண்டு அவருடைய அணி மூன்றாவது இடத்தை பிடித்து அசத்தியது. இதனைத் தொடர்ந்து ஐரோப்பா கார் பந்தயத்தில் களமிறங்க அஜித் தற்போது தயாராகி வருகின்றார். இதனால் வருகின்ற அக்டோபர் மாதம் வரை நடிக்க மாட்டேன் என ஏற்கனவே அஜித்தே அறிவித்திருந்தார்.  இந்நிலையில் இந்த மாதம் இறுதியில் குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட உள்ளதாக தெரிகிறது. இப்படியான நிலையில் இப்படத்தில் திரிஷா மட்டுமல்லாமல் மற்றொரு நடிகையும் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

25 வருடங்களுக்குப் பிறகு அஜித்துடன் இந்த படத்தில் அவர் இணைந்து நடித்துள்ளார். அந்த நடிகை சிம்ரன். தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயினியாக வலம் வந்தபோது அஜித்துக்கு ஜோடியாக அவள் வருவாளா, வாலி மற்றும் உன்னைக் கொடு என்னை தருவேன் ஆகிய மூன்று திரைப்படங்களில் அவர் நடித்திருந்தார். அதன்பிறகு அஜித்துடன் இணைந்து நடிக்காமல் இருந்த அவர் தற்போது 25 வருடங்களுக்குப் பிறகு குட் பேட் அக்லி திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஏற்கனவே திரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் நடித்த சிம்ரன் தற்போது இரண்டாவது முறையாக அவர் இயக்கத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Nanthini

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

5 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

6 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

6 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

6 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

6 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

6 மணத்தியாலங்கள் ago