சின்னப்பொண்ணு வேண்டாம் என ரிஜெக்ட் செய்த பாரதிராஜா… பின்னாளில் தன்னை தேடி அலைய வைத்த சில்க் ஸ்மிதா..!

Spread the love

இந்திய சினிமாவில் தன்னுடைய நடிப்பு மற்றும் நடனம் உள்ளிட்ட பல திறமைகளை வைத்து இன்றும் மக்கள் மனதில் நிலைத்திருப்பவர் தான் சில்க்ஸ்மிதா. நடிகை சொர்ணம் என்பவரிடம் டச் ஆஃப் கேர்ள் ஆக இருந்த விஜயலட்சுமி என்ற பெண் ஒரு சில மலையாள படங்களில் நடித்திருந்த நிலையில் 1980 ஆம் ஆண்டு வினோத் சக்கரவர்த்தி தயாரித்த வண்டி சக்கரம் என்ற திரைப்படம் மூலமாகத்தான் தமிழ் சினிமாவில் நடிகை ஆக அறிமுகமானார். இந்தப் படம் தான் அவருக்கு சில்க் ஸ்மிதா என்ற பெயரை பெற்றுத்தந்தது. முதல் படத்தில் கவர்ச்சி நடிகையாக இருந்தாலும் இரண்டாவது படமாக வெளியான அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தில் நடிகர் தியாகராஜனின் மனைவி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு ஒரு சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இவர் பல படங்களில் கவர்ச்சி கேரக்டரிலும் ஒரு பாடலுக்கு நடனமாடும் டான்ஸ் ஆகவும் நடித்திருப்பார். முன்னணி இயக்குனர்கள் தங்களுடைய படங்களில் சில்க் ஸ்மிதா இருக்க வேண்டும் என்று நினைத்துள்ளனர். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிந்த இந்திய மொழிகளில் பல படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து சில்க் ஸ்மிதா வெற்றியை கொடுத்துள்ளார்.

முதலில் பாரதிராஜா படத்தில் தான் சில்க் ஸ்மிதா அறிமுகமாக இருந்தார். 1979 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படம் தான் ஒட்டபெட்டவர். இந்தப் படம் தான் சில்க் ஸ்மிதா சினிமாவில் அறிமுகமான முதல் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படம் வெளியான அதே ஆண்டில் தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் புதிய வார்ப்புகள் திரைப்படம் வெளியானது. பாக்யராஜ் நாயகனாக அறிமுகமான இந்த படத்தில் ஒரு பூ விற்கும் பெண் கேரக்டரில் நடிக்க முதலில் சில்க் ஸ்மிதாவை தான் தேர்வு செய்துள்ளார் பாரதிராஜா. அவரை ஆபீசுக்கு அழைத்து வந்து போட்டோ சூட் எடுத்துள்ளனர். பிறகு மிகவும் சின்ன பொன்னாக இருக்கிறார் இந்த கேரக்டருக்கு சரியாக இருக்க மாட்டார் என்று கூறி அவரை வேண்டாம் என பாரதிராஜா கூறியுள்ளார்.

ஆனால் பிறகு வேறு படத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் கண்கள் அவ்வளவு அழகாக இருக்கிறது அந்த கண்ணில் காந்தம் இருக்கு என்று பாரதிராஜா கூறியுள்ளார். அதன் பிறகு 1980 ஆம் ஆண்டு வண்டி சக்கரம் படத்தில் தமிழில் அறிமுகமான சில்க் ஸ்மிதா அடுத்த ஆண்டை அலைகள் ஓய்வதில்லை படத்திற்காக தியாகராஜின் மனைவியாக நடிக்க இவர்தான் வேண்டும் என்று பாரதிராஜா அவரை அழைத்து வருமாறு மனோபாலா மற்றும் மணிவண்ணன் ஆகியோரிடம் கூறியுள்ளார். அதன் பிறகு இருவரும் சில்க் ஸ்மிதா வீட்டை கண்டுபிடித்து அவரை அழைத்து வந்துள்ளனர்.

Nanthini

Recent Posts

“திருவிழா முடியட்டும் கல்யாணம் பண்ணிக்கிறேன்!”… மாயமானதாக நாடகமாடிய காதலன்… 7 மாத கர்ப்பிணியை மூட்டையில் கட்டி கிணற்றில் வீசிய கொடூரம்…!!

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே தானகுட்டிவளவு பகுதியில் உள்ள விவசாயக் கிணறு ஒன்றில், சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் அழுகிய…

7 minutes ago

“அய்யோ காப்பாத்துங்க..!” அதிவேகத்தில் வந்த கார்… நடுரோட்டில் அலறல் சத்தம்… கல்லூரி மாணவிகளுக்கு நேர்ந்த கொடூரம்…!!

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு கல்லூரி மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். பொத்தேரியில் உள்ள தனியார்…

23 minutes ago

“அம்மா எங்கே?”… தவிக்கும் 3 பச்சிளங் குழந்தைகள்… தாயின் உயிரைக் குடித்த குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை… கதறும் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டம் கருமந்துறை அடுத்த மோதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுமதி. இவருக்கும் மாதேஸ்வரன் என்பவருக்கும் திருமணமாகி ஏற்கனவே இரண்டு குழந்தைகள்…

33 minutes ago

ஒற்றைக் காலில் 400 மீட்டர்…! ஊன்றுகோல் கூட இல்லாத ஏழ்மை… ஒரு வீடியோவால் மாறிய விதி… அரசு செய்த நெகிழ்ச்சி உதவி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பலியா மாவட்டத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ராகினி, கல்வி மீதான தனது அளப்பரிய ஆர்வத்தால்…

41 minutes ago

மாவட்ட அரசியலில் இருந்து விலகல்…. மகனுக்காக KN நேரு எடுத்த அந்த ஒரு முடிவு…. அலறும் அறிவாலயம்….!

திருச்சி திமுகவில் முதன்மைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என். நேருவின் மகனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு வழங்கப்படவில்லை…

58 minutes ago

கரூர் இடைத்தேர்தலில் திடீர் திருப்பம்…. தவெகவுக்கு செக் வைக்க செந்தில் பாலாஜி போட்ட “சீக்ரெட்” பிளான்… காலையிலேயே பரபரப்பு..!

கரூர் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தை வீழ்த்துவதற்காக திமுக மூத்த தலைவருமான செந்தில்பாலாஜி தீவிர தேர்தல் உத்திகளை வகுத்து…

1 மணத்தியாலம் ago