Categories: CINEMA

கவர்ச்சியில் மட்டுமல்ல உதவி செய்வதிலும் தாராள மனசு தான்.. சம்பாதித்த காசை வாரி வழங்கிய சில்க் ஸ்மிதா..!!

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர் நடிகைகள் இருந்தாலும் இன்றும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளவர்கள் சிலர் மட்டுமே. அப்படி இந்த மண்ணுலகை விட்டு பிரிந்து 27 ஆண்டுகள் ஆன பிறகும் ஒரு நடிகை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார் என்றால் அது நடிகை சில்க் ஸ்மிதா மட்டும்தான். ஒட்டுமொத்த திரை உலகத்தையும் தனக்கு அடிமையாக கட்டி போட்டவர். அதனால் அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா காந்தி கூட இவர் யார் என்று கேட்டுள்ளார். இதுவே இவரின் வெற்றிக்கான அடையாளம். போதை ஏற்றும் கண்கள், அசர வைக்கக்கூடிய நடனம் என கவர்ச்சியில் வித்தியாசத்தை காட்டி தன்னுடைய நடிப்புத் திறமையால் ரசிகர்களை கவர்ந்தவர்.

 

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் என பல மொழிகளில் சுமார் 450-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அன்றைய காலகட்டத்தில் இவரின் நடனம் இடம்பெறாத ஒரு திரைப்படத்தை கூட பார்க்க முடியாது. இப்படி புகழின் உச்சத்தில் இருந்து அனைவராலும் கொண்டாடப்பட்ட இவருக்கு மற்றொரு முகமும் உள்ளது. அதாவது இவர் மிகவும் இரக்ககுணம் கொண்டவர். தனக்கான ஒரு சுதந்திர வாழ்க்கையை வாழ வேண்டும் என்று விரும்பியவர். தான் பிறந்த ஊரில் கஷ்டப்படும் மக்களுக்கு இவர் அள்ளி அள்ளி பணத்தை கொடுத்து உதவியும் செய்துள்ளார்.

 

ஆந்திராவில் பண்ணையாளர்களுக்கு எதிராக போராடிய மக்களுக்கும் இப்படி நிவாரண நிதியை வாரி வழங்கியுள்ளார். தான் சம்பாதித்த பணத்தை திரையுலக தொழிலாளர்களுக்கும் ஏழைகளுக்கும் தர்மம் செய்து வாழ்ந்து வந்தார். இவரிடம் உதவி என்று யார் கேட்டு வந்தாலும் தயங்காமல் செய்துவிடும் பெரிய உள்ளம் கொண்டவர் தான் நடிகை சில்க் ஸ்மிதா. இப்படி நடிப்பு திறமையும் மறுபக்கம் ஏழைகளுக்கு உதவும் இறக்க குணமும் கொண்ட இவர் உச்சகட்ட மன அழுத்தத்தில் தன்னுடைய இறுதி முடிவை தேடியது காலத்தின் கொடுமை. அவர் மரணத்திற்குப் பிறகு அவர் மறைந்தாலும் அவரது பெயர் இன்றும் ரசிகர்கள் மத்தியில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.

Nanthini
Nanthini

Recent Posts

கார் விபத்தில் உயிரிழந்த நடிகை.. துக்கம் தாங்காமல் காதலர் தூக்கிட்டு தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

பிரபல தெலுங்கு சீரியல் நடிகை பவித்ரா ஜெயராம் கடந்த சில தினங்களுக்கு முன்பு கார் விபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது…

9 mins ago

“சுசித்ராவோட அப்பா அம்மா தற்கொலை பண்ணிட்டாங்க… கார்த்திக் Gay-னு கண்டுபிடிக்க இவ்ளோ வருஷம் ஆச்சா?” – கஸ்தூரி சரமாரி கேள்வி!

தமிழ் திரையுலகில் முன்னணி பாடகியாக  வலம் வந்தவர் தான் பாடகி சுசித்ரா. இவர் ரேடியோ மிர்ச்சியில் தொகுப்பாளராக பயணத்தை தொடங்கினார்.…

11 mins ago

50 வயதாகியும் திருமணம் ஆகாமல் இருக்கும் நடிகை சித்தாரா… அந்த பிரபல நடிகர் மேல் கொண்ட காதல்தான் காரணமா?

பார்ப்பதற்கு பக்கத்து வீட்டுப் பெண் போலவே இருந்து 80‘களின் இளைஞர்களை மனதைக் கொள்ளை கொண்ட நடிகை தான் சித்தாரா. 1986…

32 mins ago

“உன்மேல செம்ம பொறாமைல இருக்கேன்…” சுசித்ராவிடம் நேரடியாக சொன்ன அஜித்… காரணம் இதுதான்!

தமிழ் திரையுலகில் முன்னணி பாடகியாக  வலம் வந்தவர் தான் பாடகி சுசித்ரா. இவர் ரேடியோ மிர்ச்சியில் தொகுப்பாளராக பயணத்தை தொடங்கினார்.…

3 hours ago

MGR-க்கு பாடல் எழுதவில்லை என்ற கவலை தீர்ந்தது.. ஆனாலும் அதில் ஒரு குறை.. வைரமுத்துவின் வைரல் பதிவு..

தமிழ் சினிமாவில் பிரபல பாடலாசிரியராக வலம் வரும் வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவு மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…

13 hours ago

நடிகர் விஜய், கமல், ரஜினி வரிசையில் இணைந்த விஜய் சேதுபதி.. வெளிவந்த 51வது படத்தின் வித்தியாசமான டைட்டில்..!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத சிறந்த நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. மக்கள் செல்வன் என்று செல்லமாக…

15 hours ago