தமிழ் சினிமாவில் நடிகையாக பின்னணி பாடகியாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை ஸ்ருதிஹாசன் கூறியதாவது, கடந்த 2018ம் ஆண்டில் நடிப்பிலிருந்து கொஞ்ச காலம் நான் இடைவெளி எடுத்து ஒதுங்கி இருந்தேன். அந்த இடைவெளியில் நான் யார் என்பதை மறுமதிப்பீடு செய்தேன். என்னை நானே சோதனை செய்து அறிவதற்கான நேரமாக அதை பயன்படுத்திக் கொண்டேன். நான் பல ஆண்டுகளாக கடுமையான பதட்டத்தால் அவதிப்பட்டேன். அந்த பதட்டத்துடன் தினசரி நடவடிக்கைகளை என்னால் தொடர முடியவில்லை.
நான் எதைத் தேடுகிறேன். நான் யார் என்பதில் தெளிவில்லாமல் இருந்தேன். அப்போது நான் லண்டனில் இருந்தேன். அங்கே இசையின் மூலம் என்னை நான் மீண்டும் கண்டெடுத்தேன். தினமும் என் உடைகளை நானே துவைப்பது எனக்கான உணவை நானே சமைப்பது மெட்ரோ ரயிலில் பயணிப்பது எழுத்து பயிற்சி செய்வது இசை கற்பது என்று எனது தினசரி வாழ்க்கையை அமைத்துக் கொண்டேன். இப்போதும் ஒரு கலைஞராக இருப்பதை மிகவும் விரும்புகிறேன். அதுதான் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது என்று நடிகை ஸ்ருதிஹாசன் அதில் கூறியிருக்கிறார்.
இன்று, ஏப்ரல் 22, 2026 அன்று, ஜோதிட உலகின் மிக முக்கிய நிகழ்வாக சனி பகவான் மீன ராசியில் 'உதயம்'…
செங்கல்பட்டு மாவட்டம் சேலையூர் பகுதியில் வசித்து வரும் கட்டிடத் தொழிலாளி தம்பதியினரின் 16 வயது மகள் காவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).…
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், தன்னைத் தொடர்ந்து மிரட்டி வந்த முன்னாள் காதலனை இளம்பெண் ஒருவர் ஓட்டல் அறைக்குள் வைத்து…
பெண் அரசியல்வாதிகள் குறித்துப் பீகார் மாநிலம் பூர்ணியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பப்பு யாதவ் தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கள் நாடு…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் நாளை புதன்கிழமையுடன் முடிவுக்கு வரும் நிலையில், மத்திய கிழக்கில்…
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஒரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் சிக்கி 12 பேர் பலியாகினர்.…