அஜித் எங்களுக்கு “மருமகனே” இல்லை…. 23 வருடங்களுக்கு பிறகு…. உண்மையை சொன்ன ஷாலினியின் அப்பா…!!

By admin on புரட்டாதி 17, 2023

Spread the love

சினிமாவில் நடிக்கும் போது காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள் இன்றளவும் சிறந்த தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர். கருத்து வேறுபாடு காரணமாக சிலர் பிரிந்தும் போகின்றனர். இந்நிலையில் சுமார் 23 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து சிறந்த தம்பதிகளாக இருக்கும் அஜித் ஷாலினியின் காதல் பலருக்கு முன் உதாரணமாக இருக்கிறது. ஷாலினியின் அப்பா தனது மருமகன் குறித்து முதல்முறையாக பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது, அஜித் எப்போதுமே பயங்கர ஸ்பீடு. காதலிக்க ஆரம்பித்த உடனே எங்கள் வீட்டிற்கு வந்து குடும்பத்துடன் பெண் கேட்டார். அவர்களது ஜாதக பொருத்தம் எப்படி இருக்கிறது என பார்த்தோம். இருவருக்கும் 10 பொருத்தமும் பொருந்தி இருப்பதாக கூறினார்கள். அவர்கள் சொன்னது உண்மை என்பது இப்போதுதான் தெரிகிறது.

   

   

இவர்களை போல அன்பான ஜோடி எங்கும் கிடையாது. நாங்கள் திருமணத்தை நிச்சயம் செய்யும்போது எப்படி இரு குடும்பமும் ஒன்றாக மகிழ்ச்சியாக இருந்தோமோ அப்படிதான் இன்று வரை இருக்கிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. இரண்டு குடும்பத்தையும் அஜித் அப்படி பார்த்துக் கொள்கிறார். அவர் எங்களுக்கு மருமகன் கிடையாது.

 

இன்னொரு மகன் என மகிழ்ச்சியோடு ஷாலினியின் அப்பா கூறியுள்ளார். நடிப்பில் பிஸியாக இருக்கும் நடிகர்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்வது கொஞ்சம் சிரமம். ஆனால் நடிப்புக்கும் சரி குடும்பத்துக்கும் சரி அஜித் முக்கியத்துவம் கொடுக்கிறார். மாமனாரே பாராட்டும் அளவுக்கு நடிகர் அஜித் இருப்பதை அறிந்த அவரது ரசிகர்கள் குஷியாக இருக்கின்றனர்.